காதல் தோல்வியின் வலி!!!


என் நிழல் என தொடர்வாய் என நினைத்தேன்

என் பகையென மாறினாய்....!

பாசமாய் இருப்பாய் என நினைத்தேன்

அது வேசம் என சொல்லாமல் சொல்லிவிட்டு
போனாய் ....!

நான் நீயாகவும் நீ நானாகவும் இருப்பாய் என நினைத்தேன்...

ஆனால் என் உயிர் வாங்கி போக வந்தவள் நீ என்று அப்போ நினைக்கவில்லையே ....!

பேசத் தெரிந்தும் ஊமையாய் மனதுக்குள் குமுறி குமுறி கதறுகிறேன்...

பேதை இவன் தவியாய் தவிக்கிறான் ...!

வரும் கால வாழ்வை எண்ணி துடியாய் துடிக்கிறான்..!

எழுதியவர் : (29-Apr-11, 9:52 pm)
சேர்த்தது : யுவராஜ் சீ
பார்வை : 816

மேலே