தமிழ் வாழ்க

இலக்கணத்திற்கோர் தொல்காப்பியன்!
இலக்கியத்திற்கோர்
இளங்கோவடிகள்!
பொதுவுடைமையைப்
பொதுவளித்த வள்ளுவன்!
அறம்செய விரும்பினாள் ஔவையார்!
படைக்குச் சோழர்கள்!
அணைக்குக் கறிகாலன்!
ஆலயத்திற்கு இராசராசன்!
உண்மைக்கு அரிச்சந்திரன்!
நட்புக்கு இளங்கோவும் சாத்தனாரும்!
பெண்ணினத்தின் வீரத்தின் சான்றாக வேலுநாச்சி!
அதிரடிக்கு கட்டபொம்மன்!
கற்புக்கோர் கண்ணகி!
கொடைக்குக் கடையேழு வள்ளல்கள்!
புதுமைக்குப் பாரதி
புரட்சிக்கவன் தாசன்!
தத்துவம் சொல்ல கண்ணதாசன்!
காதலுக்கு வைரமுத்து!

அனைத்திலும் தமிழன்
அசைக்க ஒன்னாவிடத்தில் உள்ளான்!

கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே
முன்தோன்றிய மூத்தமொழியாம் தமிழை,
பின்தோன்றிய தமிழர்நாம்
வளர்ந்த தமிழை வளர்க்க வேண்டாம்,
அழிந்துவிடாமல் காத்தால் போதும்..

எழுதியவர் : த.கோபாலகிருட்டிணன் (9-Apr-15, 2:10 pm)
பார்வை : 341

மேலே