பிரயாணம்

எனைத் தேடி
என்னுள் பிரயாணப்பட்டுவிட்டேன் நான்.
ஆக்ரோசமாய் கொந்தளித்து
ஆர்ப்பரிக்கிறது மனது.
காலெல்லாம் கவலை தேய்த்து
கரைதனை தேடுகிறேன்.
சுயத்தை இழந்தும் விட்டேன்..
நொடிகளில் யுகங்களை
பிரசவித்துக் கொண்டிருக்கிறேன்..
யாருக்காக பிறப்பு..
ஏனிந்த இழப்புகள்..
விடை தெரியா கேள்விகளுடன்
விவரிக்க இயலா மனநிலையுடன்
வெகுதூரம் பயணித்துவிட்டேன்..
கருமை சூழ பிரபஞ்ச வெளியில்
பேரமைதியை தரிசிக்கையில்
சட்டென சுட்டது நிக்கோடின்
நனைத்த சாம்பல்..

எழுதியவர் : யசோக்குமார் (11-Apr-15, 8:44 am)
சேர்த்தது : உழவன்
Tanglish : prayaanam
பார்வை : 159

மேலே