உழவன் - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : உழவன் |
இடம் | : 13-12-1992 |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 08-Mar-2015 |
பார்த்தவர்கள் | : 42 |
புள்ளி | : 2 |
மழை நாட்களில் வரும் பேருந்து பயணங்கள் அலாதியானவை..
அவை உனக்கு பிரியமானவை என நீ விவரிக்கும் போதே கண்டுகொண்டேன் சகியே..
நேர்த்தியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நீ விவரிக்க முயல்கையில் அடுத்த வார்த்தை தொக்கி வந்திருக்கும்..
நான் அந்த கோடிட்ட இடத்தை நிரப்புகையில் அது ஆகச்சிறந்த கவிதையாயிருக்கும்..
நாம் இருவர் பயணித்த தருணங்களில் சில முறை நம் பேச்சில் மழை குறுக்கிட்டிருக
்கும்..
நீ மழை ரசிக்கையில் உன் கன்னத்தில் விழுந்து தெறித்து முத்தாய் போன துளிகளை நான் தேடிக் கொண்டுருப்பேன்..
யாவரும் சன்னல்க (...)
மழை நாட்களில் வரும் பேருந்து பயணங்கள் அலாதியானவை..
அவை உனக்கு பிரியமானவை என நீ விவரிக்கும் போதே கண்டுகொண்டேன் சகியே..
நேர்த்தியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நீ விவரிக்க முயல்கையில் அடுத்த வார்த்தை தொக்கி வந்திருக்கும்..
நான் அந்த கோடிட்ட இடத்தை நிரப்புகையில் அது ஆகச்சிறந்த கவிதையாயிருக்கும்..
நாம் இருவர் பயணித்த தருணங்களில் சில முறை நம் பேச்சில் மழை குறுக்கிட்டிருக
்கும்..
நீ மழை ரசிக்கையில் உன் கன்னத்தில் விழுந்து தெறித்து முத்தாய் போன துளிகளை நான் தேடிக் கொண்டுருப்பேன்..
யாவரும் சன்னல்க (...)
பாலைவனத்தில் பூத்த ரோஜா ஒன்று
மாலைநேர நிலவின் தாகத்தால் வாடியது.
கலையின் கிளையான கதையொன்று முறிந்தது,
தொலை தூரத்தில் எழுதிய விதிப்படி....,
ஆன்மாவின் மனதில் வேரூன்றிய
ஆன்மிக பாடல் குரல் ஊமையானதே!
உலகம் கண்டும் காணாத நிகழ்வை
கதையாக்கும் கைவிரல்கள் ஊனமானதே!
இஸ்லாமிய தோட்டத்தில் வளர்ந்த காட்டு
மூங்கில் புல்லாங்குழல் உடைந்து விட்டது.
பாற்கடலில் நீந்திய மீன்களெல்லாம்
காலம் விட்ட சாபத்தில் இறந்து விட்டது.
இறைவனை புகழும் பாடலை உன்
குரலில் கேட்க நினைத்தான் நாயகம்.
உலகின் கதை எழுதும் உன்னை உலகத்தின்
கதையை சரிபார்க்க அழைத்தான் எமன்.
பல நெஞ்சம் கசிந்தது,ஆயிரம் கண்கள் அழுதது,
உ
எனைத் தேடி
என்னுள் பிரயாணப்பட்டுவிட்டேன் நான்.
ஆக்ரோசமாய் கொந்தளித்து
ஆர்ப்பரிக்கிறது மனது.
காலெல்லாம் கவலை தேய்த்து
கரைதனை தேடுகிறேன்.
சுயத்தை இழந்தும் விட்டேன்..
நொடிகளில் யுகங்களை
பிரசவித்துக் கொண்டிருக்கிறேன்..
யாருக்காக பிறப்பு..
ஏனிந்த இழப்புகள்..
விடை தெரியா கேள்விகளுடன்
விவரிக்க இயலா மனநிலையுடன்
வெகுதூரம் பயணித்துவிட்டேன்..
கருமை சூழ பிரபஞ்ச வெளியில்
பேரமைதியை தரிசிக்கையில்
சட்டென சுட்டது நிக்கோடின்
நனைத்த சாம்பல்..
உண்மைக்கு இங்கே மதிப்பில்லை
பொய்மைக்கு மதிப்போ நிகரில்லை
வாய்மையும் வளமையும்
வறண்டு கிடக்கிறது.
களவும் கலவியும்
நிரம்பி நிற்கின்றது..
வாய்மையின் வீட்டு அடுப்பில்
பூனை உறங்குகிறது..
பொய்மையின் வீட்டு அடுப்பே
பொங்கி வழிகிறது..
ஊடகமோ உண்மையில்லை
செய்தியோ சரியில்லை
அவன் ஓடிப்போனாள்
இவள் ஓடிப்போனாள்
செய்தி தலைப்பானாது..
தங்கப்பதக்கமோ உபரியானாது..
கற்புக்கிங்கே காவலில்லை
கவர்ச்சிக்கோ எல்லையில்லை.
காமத்துக்கு கட்டுப்பாடில்லை..
படிப்புக்கோ பஞ்சமில்லை
கல்வியோ தரமில்லை..
கல்லூரியோ அளவில்லை
பட்டதாரிகளோ எண்ணிலடங்கவில்லை..
வேலைக்கோ வாய்ப்பில்லை..
மருந்துக்கோ காசில்லை-அரசு
மருந்துத்