எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

மழை நாட்களில் வரும் பேருந்து பயணங்கள் அலாதியானவை.. அவை...

மழை நாட்களில் வரும் பேருந்து பயணங்கள் அலாதியானவை..
அவை உனக்கு பிரியமானவை என நீ விவரிக்கும் போதே கண்டுகொண்டேன் சகியே..
நேர்த்தியான வார்த்தைகளை தேர்ந்தெடுத்து நீ விவரிக்க முயல்கையில் அடுத்த வார்த்தை தொக்கி வந்திருக்கும்..
நான் அந்த கோடிட்ட இடத்தை நிரப்புகையில் அது ஆகச்சிறந்த கவிதையாயிருக்கும்..
நாம் இருவர் பயணித்த தருணங்களில் சில முறை நம் பேச்சில் மழை குறுக்கிட்டிருக
்கும்..
நீ மழை ரசிக்கையில் உன் கன்னத்தில் விழுந்து தெறித்து முத்தாய் போன துளிகளை நான் தேடிக் கொண்டுருப்பேன்..
யாவரும் சன்னல்களை சட்டென மூடுகையில் நம் இருக்கை மட்டும் நனைந்து கொண்டிருக்கும்.
உச்ச மழையின் போது வீதியிலிறங்கி நடந்திருப்போம்,
மழை நேர தேநீர் கொள்ளை இஷ்டம் உனக்கு..
துளி மழையில் நனைந்து தேநீர் அருந்தையில் உதடு குவியும் அழகு,வர்ணனையில் வடித்து வார்த்தையாக்க முடியவில்லை என்னால்..கதகதப்பான தேநீரில் உன் போதை ஏறியிருக்கும் எனக்கு..
இன்றும் அதே மழை... வெறுமையாய்
பக்கத்து இருக்கை..
குடையாய் வந்து கொண்டிருக்கிறது உன் நினைவுகள்..

பதிவு : உழவன்
நாள் : 20-Jun-15, 7:37 am

மேலே