ஆதர்ஷ்ஜி - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  ஆதர்ஷ்ஜி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-Feb-2015
பார்த்தவர்கள்:  416
புள்ளி:  100

என்னைப் பற்றி...

தமிழ்க் கடலை கண்டு வியந்து நிற்கும் ஆர்வலன்... கால் நனைக்கும் பொழுதே இத்தனை இன்பமெனில்..
மூழ்கி, நீந்தி, முத்துக்குளிக்கையில்...??? !!!
தமிழ்த் தாயின் மடி நாடும் பிள்ளை நான்... என்றென்றும்..

என் படைப்புகள்
ஆதர்ஷ்ஜி செய்திகள்
ஆதர்ஷ்ஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
14-Aug-2016 4:20 pm

மஞ்சள் கொள்ளை கொண்ட வெண்முத்தே.... ~ஆதர்ஷ்ஜி
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

கடலில்லா காஞ்சியில் கிடைத்த நல்முத்து
காமாலை சிப்பிக்குள் அடங்கிப் போனதே அய்யோ!

பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சி
பாட்டுக்குப் புகழ்பெற்ற துன்னால்!

உன் முற்றத்தில் வந்தாடிய அணில்கள் சுற்றத்தின்
அருமை சொன்னன...!

நீ அடைகாத்த
காக்கா முட்டைகளிலிருந்து
பறந்தன எப்போதும்
கவிதைக் குயில் குஞ்சுகள்...!

மனிதத்தை நேசித்த உன்
புனித வரிகளால்
வடக்கிற்கும் தெற்கிற்கும்
விருதுகளால் அமைந்ததோர் பாலம்!

கவிதைத் தொகுப்பாய்
நீ எழுதிய
குடும்பம் இன்று
காலம் கலைத்து எறிந்த வார்த்தைகளாய்...

தீபத்தின் அருக

மேலும்

அவர் மறைந்தாலும்...அவரது பாடல்கள் மூலம் நம் மனங்களில் என்றும் வாழ்வார்...... அவரது ஆத்மா சாந்தியடைய அனைவரும் ஒன்றாக பிரார்த்தனை செய்வோம்..... 15-Aug-2016 6:27 am
கவிஞருக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.... 14-Aug-2016 6:43 pm
ஆதர்ஷ்ஜி அளித்த ஓவியத்தில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2016 6:04 pm

கபாலி ரஜினி ஹிந்து நாளிதழில் வந்ததை வைத்து வரைந்தேன்

மேலும்

நன்றி 14-Aug-2016 4:13 pm
நன்றி 14-Aug-2016 4:13 pm
நன்றி 14-Aug-2016 4:13 pm
சிறந்த முயற்சி அழகு ஓவியம்..... 09-Aug-2016 10:13 am
ஆதர்ஷ்ஜி - ஓவியம் (public) சமர்ப்பித்துள்ளார்
27-Jul-2016 6:04 pm

கபாலி ரஜினி ஹிந்து நாளிதழில் வந்ததை வைத்து வரைந்தேன்

மேலும்

நன்றி 14-Aug-2016 4:13 pm
நன்றி 14-Aug-2016 4:13 pm
நன்றி 14-Aug-2016 4:13 pm
சிறந்த முயற்சி அழகு ஓவியம்..... 09-Aug-2016 10:13 am
ஆதர்ஷ்ஜி அளித்த படைப்பில் (public) Uthayasakee மற்றும் 1 உறுப்பினர் கருத்து அளித்துள்ளனர்
27-Jul-2016 9:52 am

அகரம் நீ~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

உன் மூச்சுக் காற்றில் பரவிய கனவுகள் விழுந்தன கணக்கில்லா மனங்களில் விதைகளாய்.

உன் பேச்சிலும் செயலிலும்
ஆழ்ந்திருந்தன
அவ்விதைக்கான
வெப்பமும் நீரும்.

வளர்ந்திடும் ஓர் அடர் காடாய்
அன்பும் அறிவும் மனிதமும்
சிகரமாய் சிறந்திடும் பாரதம் -அதன்
அகரமாய் நீயிருப்பாய் என்றும்

~ஆதர்ஷ்ஜி

(இன்று 27.7.2016 கலாம் ஐயா முதல் நினைவுநாள் )

மேலும்

நன்றி 28-Jul-2016 6:23 am
வணங்கிடுகிறேன் தோழமையே 28-Jul-2016 6:23 am
நல்லவர் புகழ் பாடிய உங்கள் கவிக்கு நன்றிகள் பல...வாழ்த்துக்கள் 27-Jul-2016 8:48 pm
தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல 27-Jul-2016 12:42 pm
ஆதர்ஷ்ஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
27-Jul-2016 9:52 am

அகரம் நீ~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»

உன் மூச்சுக் காற்றில் பரவிய கனவுகள் விழுந்தன கணக்கில்லா மனங்களில் விதைகளாய்.

உன் பேச்சிலும் செயலிலும்
ஆழ்ந்திருந்தன
அவ்விதைக்கான
வெப்பமும் நீரும்.

வளர்ந்திடும் ஓர் அடர் காடாய்
அன்பும் அறிவும் மனிதமும்
சிகரமாய் சிறந்திடும் பாரதம் -அதன்
அகரமாய் நீயிருப்பாய் என்றும்

~ஆதர்ஷ்ஜி

(இன்று 27.7.2016 கலாம் ஐயா முதல் நினைவுநாள் )

மேலும்

நன்றி 28-Jul-2016 6:23 am
வணங்கிடுகிறேன் தோழமையே 28-Jul-2016 6:23 am
நல்லவர் புகழ் பாடிய உங்கள் கவிக்கு நன்றிகள் பல...வாழ்த்துக்கள் 27-Jul-2016 8:48 pm
தோழமைக்கு மனமார்ந்த நன்றிகள் பல 27-Jul-2016 12:42 pm
ஆதர்ஷ்ஜி - மெய்யன் நடராஜ் அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
28-Nov-2015 2:21 am

பெண் கருவே
உன் வருகையை எதிர்பார்த்து
பெருத்த மார்புக் கிளைகளில்
சுரந்திருக்கும் பாலை
பருக்கிவிடுவதற்காக
பருத்தக் காம்புகளுடன்
காத்துக்கிடக்கும் கள்ளி மரங்கள்.

தீராத மோகங்களுடன்
தெருநாய்ப்போல் திரிகின்றக்
குறிக்கோள் கொண்டு
புணர்தலுக்கான வன்முறைகளுடன்
வரைமுறை கடந்து
திக்கெட்டும் மறைந்துகிடக்கும்
காமப் பிசாசுகள் உன்னை
ஆட்டிவைக்கக் நாள் குறித்து
விட்டிருக்கும்.

உனது பருவத் தேன்வதைகளை
பிழிந்து பருகிவிடும் நோக்கத்தை
உன் தேவைகளை தீர்க்கின்ற
திருத்தேவையாக்கி
பாலியல் இலஞ்சம் வாங்கி
பசி தீர்க்கக் காத்திருக்கின்றன
பதவி நாற்காலிகளும்

உன் வளர்ச்சி பாதைகளின

மேலும்

அய்யா இன்னும் அந்த எழுத்துப் பிழைகள் திருத்தப் படவில்லை . 02-Dec-2015 4:22 pm
மிக்க நன்றி குமரேசன் 02-Dec-2015 2:19 am
பெண்களின் பிறப்பு , பிறந்தது முதல் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும் , வல்லூறுவின் கொடும் பார்வையில் தப்பிக்க போராடும் சிறு குஞ்சாய் இடர்படும் வலிகள் வரிக்கு வரி வாசகர்களை சுண்டியிழுக்கிறது. வாழ்த்துக்கள். மெய்யன் சார். 30-Nov-2015 10:41 pm
மிக்க நன்றி ராஜேந்திரன் . 29-Nov-2015 2:16 am
ஆதர்ஷ்ஜி - படைப்பு (public) அளித்துள்ளார்
24-Nov-2015 7:27 am

விழாக் கோலம் போலொரு மழைக்காலம் ~ ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

மண்வாசனையில் கலந்திட்ட
நெல் வாசனையை முகர்ந்தும்,

மழை நீர் ஓடிடும் வண்டலில்
மண் புழுக்களும் நத்தையும்
பந்தயம் வைத்து ஊரும் விந்தைக் கண்டும்,

மழையோடு வீசும் பெருங்காற்றில் வீழ்ந்த
மாங்காய்கள் பொறுக்கித் தின்ன நனைந்து ஓடியும்

புது வெள்ளம் வரும் வாய்க்காலில் நீர் எடுக்க
குடம் சுமர்ந்து வரும் குமரியரை ஈர்க்க
விரால் மீனாய் வெள்ளத்தில் பாய்ந்து நீந்தியும்

ஒளிந்து விளையாடும் போது
நுழைந்த வீட்டிலெல்லாம் சூடான பலகாரம் தின்றும்

மழையினை விழாவாய் வரவேற்று வாழும்
பழமைசூழ் ஊரில் பிறந்து வாழ்ந்தவன

மேலும்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி தோழமையே..... 09-Feb-2016 5:46 pm
யதார்த்தம் நிறைந்துள்ளது... உங்கள் கவியில்.... 09-Feb-2016 2:42 pm
கூர்ந்து படித்து கருத்து சொன்னதற்கு நன்றி தோழர் .... "தின்ன" ~ தின்பதற்காக என்ற பொருளில் பயன்படுத்தினேன் .... நன்றி ... 25-Nov-2015 10:27 pm
நன்றி தோழர் 25-Nov-2015 10:25 pm
ஆதர்ஷ்ஜி - விவேகானந்தன் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
25-Apr-2015 12:24 am

அவள் இல்லாமல் நான் உறங்கியதில்லை...
அவளுடன் உறங்குவதால் நோய்கள் வரலாம்....
இதுவரை அவள் என்னை உறங்கவிட்டதில்லை...
காதறுகே முனுமுனுத்து கடுப்பேற்றுவாள்...
திரும்பிப்பார்த்தால் ஒளிந்து கொள்வாள்...
அவள்தான் டென்னிஸ் விளையாட்டை இந்தியாவிலே பிரபலப்படுத்தியவள்....
அவளை கொலை செய்ய நான் தீட்டாத திட்டம் இல்லை....
அடிக்கடி கோபத்தில் அவளிடம் நான் சொல்லும் வார்த்தை""" அடியே கொசு..உன்ன கொல்லாம விடமாட்டேன்.."""
அவள் ""கொசு""..

மேலும்

நல்ல நகைச்சுவை...!! 04-May-2015 9:14 pm
ஹா ஹா 26-Apr-2015 6:24 am
ஹ ஹா நன்று ....தொடருங்கள் 25-Apr-2015 12:56 am
வெள்ளூர் ராஜா அளித்த படைப்பை (public) முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான் மற்றும் 1 உறுப்பினர் பகிர்ந்துள்ளனர்
21-Mar-2015 4:00 pm

திருவிழாவில்
தேர் இழுக்கிறார்களாமே...
இல்லையே
தேர் தானே என்னை இழுக்கிறது..!

@ @ @

அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!


@ @ @

அதென்ன...
உனக்குச் சீட்டெடுக்கும்
கிளி மட்டும்
எப்போதும்
மீனாட்சியையே எடுக்கிறதே...!

@ @ @

கோடை காலப் பேருந்தும்
குளு குளு மகிழுந்தானதே...
எதிர் இருக்கையில் இருக்கிறாய் நீ..!

@ @ @

பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது என்றேன்..!

மேலும்

மிகுந்த நன்றிகள் தோழர் arungeev 18-Apr-2015 4:34 pm
மிகுந்த நன்றி தோழரே. 18-Apr-2015 4:34 pm
மிக்க நன்றி தோழரே. 18-Apr-2015 4:34 pm
மிக்க நன்றி ஜெயஸ்ரீ தோழரே. 18-Apr-2015 4:33 pm
ஆதர்ஷ்ஜி - ஆதர்ஷ்ஜி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
10-Feb-2015 10:17 pm

மர உச்சியில் தொங்கிய மாங்காய்களைப் பறித்த போது,

கிணற்றுக்குள் விழுந்த ஆடைகளை எடுக்க எத்தனிக்கையில் என நான்
குருவிக் கூடுகளைக் கலைத்திருந்தாலும்,

குருவிகள் என் மீதமர்ந்து
காதல் கொள்ளும்...

தொழுவத்தின் ஓரத்தில்
ஓய்வாய் நான்
கயிற்றில் தொங்குகையில்...

மேலும்

நன்றி சகா 16-Mar-2015 5:18 pm
நன்றி சகா 16-Mar-2015 5:18 pm
நன்றி சகா 16-Mar-2015 5:18 pm
கம்பின் மீது காதல் கொள்ளும் குருவிகளைப் போல் உங்கள் கவியின் மீது காதலுடன் மணி...அழகு 16-Mar-2015 10:07 am
ஆதர்ஷ்ஜி - சோழகக்கொண்டல் அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
09-Mar-2015 1:02 am

தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு

பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்

உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி

நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்

பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக

இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.

மேலும்

மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (26)

உதயசகி

உதயசகி

யாழ்ப்பாணம்
user photo

விக்னேஷ்

திருப்பூர் மாவட்டம் பல்ல
கவியமுதன்

கவியமுதன்

சென்னை (கோடம்பாக்கம் )

இவர் பின்தொடர்பவர்கள் (27)

சகா சலீம் கான்

சகா சலீம் கான்

சென்னை/ஆர்.எஸ்.மங்கலம்

இவரை பின்தொடர்பவர்கள் (26)

மேலே