ஆதர்ஷ்ஜி - சுயவிவரம்
(Profile)


எழுத்தாளர்
இயற்பெயர் | : ஆதர்ஷ்ஜி |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 08-Feb-2015 |
பார்த்தவர்கள் | : 428 |
புள்ளி | : 100 |
தமிழ்க் கடலை கண்டு வியந்து நிற்கும் ஆர்வலன்... கால் நனைக்கும் பொழுதே இத்தனை இன்பமெனில்..
மூழ்கி, நீந்தி, முத்துக்குளிக்கையில்...??? !!!
தமிழ்த் தாயின் மடி நாடும் பிள்ளை நான்... என்றென்றும்..
மஞ்சள் கொள்ளை கொண்ட வெண்முத்தே.... ~ஆதர்ஷ்ஜி
»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
கடலில்லா காஞ்சியில் கிடைத்த நல்முத்து
காமாலை சிப்பிக்குள் அடங்கிப் போனதே அய்யோ!
பட்டுக்குப் புகழ்பெற்ற காஞ்சி
பாட்டுக்குப் புகழ்பெற்ற துன்னால்!
உன் முற்றத்தில் வந்தாடிய அணில்கள் சுற்றத்தின்
அருமை சொன்னன...!
நீ அடைகாத்த
காக்கா முட்டைகளிலிருந்து
பறந்தன எப்போதும்
கவிதைக் குயில் குஞ்சுகள்...!
மனிதத்தை நேசித்த உன்
புனித வரிகளால்
வடக்கிற்கும் தெற்கிற்கும்
விருதுகளால் அமைந்ததோர் பாலம்!
கவிதைத் தொகுப்பாய்
நீ எழுதிய
குடும்பம் இன்று
காலம் கலைத்து எறிந்த வார்த்தைகளாய்...
தீபத்தின் அருக
கபாலி ரஜினி ஹிந்து நாளிதழில் வந்ததை வைத்து வரைந்தேன்
கபாலி ரஜினி ஹிந்து நாளிதழில் வந்ததை வைத்து வரைந்தேன்
அகரம் நீ~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
உன் மூச்சுக் காற்றில் பரவிய கனவுகள் விழுந்தன கணக்கில்லா மனங்களில் விதைகளாய்.
உன் பேச்சிலும் செயலிலும்
ஆழ்ந்திருந்தன
அவ்விதைக்கான
வெப்பமும் நீரும்.
வளர்ந்திடும் ஓர் அடர் காடாய்
அன்பும் அறிவும் மனிதமும்
சிகரமாய் சிறந்திடும் பாரதம் -அதன்
அகரமாய் நீயிருப்பாய் என்றும்
~ஆதர்ஷ்ஜி
(இன்று 27.7.2016 கலாம் ஐயா முதல் நினைவுநாள் )
அகரம் நீ~ஆதர்ஷ்ஜி
.»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»»
உன் மூச்சுக் காற்றில் பரவிய கனவுகள் விழுந்தன கணக்கில்லா மனங்களில் விதைகளாய்.
உன் பேச்சிலும் செயலிலும்
ஆழ்ந்திருந்தன
அவ்விதைக்கான
வெப்பமும் நீரும்.
வளர்ந்திடும் ஓர் அடர் காடாய்
அன்பும் அறிவும் மனிதமும்
சிகரமாய் சிறந்திடும் பாரதம் -அதன்
அகரமாய் நீயிருப்பாய் என்றும்
~ஆதர்ஷ்ஜி
(இன்று 27.7.2016 கலாம் ஐயா முதல் நினைவுநாள் )
பெண் கருவே
உன் வருகையை எதிர்பார்த்து
பெருத்த மார்புக் கிளைகளில்
சுரந்திருக்கும் பாலை
பருக்கிவிடுவதற்காக
பருத்தக் காம்புகளுடன்
காத்துக்கிடக்கும் கள்ளி மரங்கள்.
தீராத மோகங்களுடன்
தெருநாய்ப்போல் திரிகின்றக்
குறிக்கோள் கொண்டு
புணர்தலுக்கான வன்முறைகளுடன்
வரைமுறை கடந்து
திக்கெட்டும் மறைந்துகிடக்கும்
காமப் பிசாசுகள் உன்னை
ஆட்டிவைக்கக் நாள் குறித்து
விட்டிருக்கும்.
உனது பருவத் தேன்வதைகளை
பிழிந்து பருகிவிடும் நோக்கத்தை
உன் தேவைகளை தீர்க்கின்ற
திருத்தேவையாக்கி
பாலியல் இலஞ்சம் வாங்கி
பசி தீர்க்கக் காத்திருக்கின்றன
பதவி நாற்காலிகளும்
உன் வளர்ச்சி பாதைகளின
விழாக் கோலம் போலொரு மழைக்காலம் ~ ஆதர்ஷ்ஜி
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
மண்வாசனையில் கலந்திட்ட
நெல் வாசனையை முகர்ந்தும்,
மழை நீர் ஓடிடும் வண்டலில்
மண் புழுக்களும் நத்தையும்
பந்தயம் வைத்து ஊரும் விந்தைக் கண்டும்,
மழையோடு வீசும் பெருங்காற்றில் வீழ்ந்த
மாங்காய்கள் பொறுக்கித் தின்ன நனைந்து ஓடியும்
புது வெள்ளம் வரும் வாய்க்காலில் நீர் எடுக்க
குடம் சுமர்ந்து வரும் குமரியரை ஈர்க்க
விரால் மீனாய் வெள்ளத்தில் பாய்ந்து நீந்தியும்
ஒளிந்து விளையாடும் போது
நுழைந்த வீட்டிலெல்லாம் சூடான பலகாரம் தின்றும்
மழையினை விழாவாய் வரவேற்று வாழும்
பழமைசூழ் ஊரில் பிறந்து வாழ்ந்தவன
அவள் இல்லாமல் நான் உறங்கியதில்லை...
அவளுடன் உறங்குவதால் நோய்கள் வரலாம்....
இதுவரை அவள் என்னை உறங்கவிட்டதில்லை...
காதறுகே முனுமுனுத்து கடுப்பேற்றுவாள்...
திரும்பிப்பார்த்தால் ஒளிந்து கொள்வாள்...
அவள்தான் டென்னிஸ் விளையாட்டை இந்தியாவிலே பிரபலப்படுத்தியவள்....
அவளை கொலை செய்ய நான் தீட்டாத திட்டம் இல்லை....
அடிக்கடி கோபத்தில் அவளிடம் நான் சொல்லும் வார்த்தை""" அடியே கொசு..உன்ன கொல்லாம விடமாட்டேன்.."""
அவள் ""கொசு""..
திருவிழாவில்
தேர் இழுக்கிறார்களாமே...
இல்லையே
தேர் தானே என்னை இழுக்கிறது..!
@ @ @
அமுதென்பது...
உன்
ஐ விரல் கடைவது...!
@ @ @
அதென்ன...
உனக்குச் சீட்டெடுக்கும்
கிளி மட்டும்
எப்போதும்
மீனாட்சியையே எடுக்கிறதே...!
@ @ @
கோடை காலப் பேருந்தும்
குளு குளு மகிழுந்தானதே...
எதிர் இருக்கையில் இருக்கிறாய் நீ..!
@ @ @
பேப்பரும் பேனாவுமாக
ஏதோ எழுதிக் கொண்டிருக்கிறாய்...
என்ன செய்கிறாய் என்றேன்..
அழகுக் குறிப்பெடுக்கிறேன் என்கிறாய் ..
ஓ...
அழகு...
குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறது என்றேன்..!
மர உச்சியில் தொங்கிய மாங்காய்களைப் பறித்த போது,
கிணற்றுக்குள் விழுந்த ஆடைகளை எடுக்க எத்தனிக்கையில் என நான்
குருவிக் கூடுகளைக் கலைத்திருந்தாலும்,
குருவிகள் என் மீதமர்ந்து
காதல் கொள்ளும்...
தொழுவத்தின் ஓரத்தில்
ஓய்வாய் நான்
கயிற்றில் தொங்குகையில்...
தெளிவானம்
நீள்வெளி
முழுநிலவு
பின்மாலை மழையின்
எஞ்சிய சிறுகுட்டைத்
தேங்கல் நீர்
உதிர்ந்து இறங்கிய மீன்களை
உச்சியில் சூடி
நிறைத்துப்பூத்து நிற்கும்
மரமல்லி
நீரில் முகம் பார்க்கும்
நிலவின் பிம்பத்தை
உதிர்ந்து உதிர்ந்து கலைத்தபடியே
இரவை நீட்டிக்கும்
மரமல்லி பூக்கள்
பூவிழுந்தோறும்
அலை எழும்தோறும்
வெப்பம் கொள்ளும் காற்று
உன்மத்தமேறி அலைகிறது
கிளைகளுக்கும்
அலைகளுக்குமாக
இந்த இரவு
முடிவதாயில்லை
நிலவும் விடுவதாயில்லை.
நண்பர்கள் (26)

உதயசகி
யாழ்ப்பாணம்

குருமுருகன்
மதுரை

விக்னேஷ்
திருப்பூர் மாவட்டம் பல்ல

பார்த்திப மணி
கோவை

கவியமுதன்
சென்னை (கோடம்பாக்கம் )
இவரை பின்தொடர்பவர்கள் (26)

கவிபுத்திரன் எம்பிஏ
இம்மை

முஹம்மது ஹனிபா முஹம்மது ஸர்பான்
ஓட்டமாவடி-03 இலங்கை
