ஹைக்கூ சென்ட்ரியு கவிஞர் இரா இரவி

ஹைக்கூ ! சென்ட்ரியு ! கவிஞர் இரா .இரவி !

மலருக்கு வலியின்றி
உண்டது தேன்
வண்டு !

உண்ண முடியாத
வெள்ளை அப்பம்
முழு நிலவு !

அறிகின்றன விலங்குகள்
அறியவில்லை மனிதன்
இயற்கையின் சீற்றம் !

பண்படுத்தப் படைத்தவை
புண் படுத்தப் பயன்படுகின்றன
மதங்கள் !

நன்றியோடு வணங்கின
பூமியை
நெற்க்கதிர்கள் !

நேரத்தை மட்டுமல்ல
தன்னையும் வீணாக்குகின்றான்
சோம்பேறி !

அறிவாளியையும்
முட்டாளாக்கும்
பணம் !

நல்லவனையும்
நய வஞ்சகனாக்கும்
கொடிய பணம் !

கொடுத்தால் குறையாமல்
வளரும் விந்தை
கல்வி !

உருவம் இல்லாதது
உருப்புகளை விட மேலானது
கல்வி !

முகத்தின் புன்னகை
அழகாக்கும்
அகத்தை !

உதவுகின்றன
உண்ணுவதற்கு
விரல்களின் கூட்டணி !

செய்த உதவியை
சொல்லிக் காட்டுவது
அறம் அன்று !

இறுதிக்குப் பின்னும்
தொடர்வது உறவுகள் அன்று
செய்த தொண்டு !

முடியும் என்று முயன்றவன்
முத்தமிடுகிறான்
வெற்றியை !

எழுதியவர் : கவிஞர் இரா .இரவி (17-Apr-15, 7:43 pm)
சேர்த்தது : கவிஞர் இரா இரவி
பார்வை : 131

மேலே