மீளாப் பயணத்தின் முன்பாக- தாகூரின் கவிதை மொழியாக்கம்

பணி முடித்து பறந்து செல்ல
அனுமதிச் சீட்டு என்னிடத்தில் ..!
இவ்வேளையில்..
சுற்றத்திற்கும் நட்பிற்கும்
சிரம் தாழ்த்தி வணங்கி நான்
விடைபெறுகின்றேன் ..!
என்னுடன் எடுத்து செல்லவில்லை..
இந்த வீட்டின் ..திறவுகோலையும்
எனது எல்லா உடைமைகளையும்!
மாறாக..அவைகளை..
இங்கேயே..
விடுத்துச் செல்லும் நான்
வேண்டுவது..
உங்களின்
இறுதியான ..
அன்பு வார்த்தைகள்..
மட்டுமே!
கடந்து போன ..
உன்னதமான நாட்களில் எல்லாம் ..
என்னால் ..
கொடுக்க முடிந்ததெல்லாம் ..
சிறு துளிகள் மட்டுமே..!
நீங்கள் ..
எனக்கு அளித்ததென்பதோ ..
கரை புரண்ட வெள்ளமே .!.
எனது இருளை விளக்க
இதுவரையில் ..
எனக்கு ..
துணை நின்ற விளக்கு
அணையவும்..
விடிகின்ற பொழுது ..
புலரவும் ...
தொடங்கும் இவ்வேளையில் ..
..
அழைப்பு..
..வந்து விட்டது ..!
நானும் ..
இதோ...
புறப்பட ஆயத்தமாய் !
ORIGINAL POEM BY
"RABINDRANATH TAGORE' which goes as follows:
I have got my leave. Bid me farewell, my brothers!
I bow to you all and take my departure.
Here I give back the keys of my door
---and I give up all claims to my house.
I only ask for last kind words from you.
We were neighbors for long,
but I received more than I could give.
Now the day has dawned
and the lamp that lit my dark corner is out.
A summons has come and I am ready for my journey.