நகரமயமாதல்

வயல்வெளியில் வீடுகள்
சுடுகாடுகளில் ஆலைகள்
வாய்கால்களில் ரோடுகள்
குளங்களில் பேருந்து நிலையங்கள்
ஆறுகள் இன்றைய கூவங்கள்
கிராமங்கள் நகரமாகிறது
முன்னேறுகிறதாம் இந்தியா
விவசாயநிலங்கள் குறைந்தன
உணவுகள் விஷமாயின
ஆலைகளால் நோயாளிகள்
மருந்தே உணவாயின
பள்ளிகள் அதிகரித்தன
ஒழுக்கங்கள் குறைந்தன
வீடுகள் கணினிமயமாயின
நட்புகள் குறைந்தன
வலைத்தளங்கள் பெருகின
விளையாட்டுக்கள் குறைந்தன
வாழ்நாட்கள் சுருங்கின
கிராமத்தை மாசுபடுத்தி நகரமென்ற பெயரில் நரகமாக்காதீர்
முன்னேற்றங்கள் கிராமங்கள் அழிந்து நகரம் பிறப்பதிலல்ல
கிராமங்கள் வளர்வதில்தான்

எழுதியவர் : (29-Apr-15, 11:49 pm)
பார்வை : 479

மேலே