அஜய் ஹ கே - சுயவிவரம்
(Profile)


வாசகர்
இயற்பெயர் | : அஜய் ஹ கே |
இடம் | : கன்னியாகுமரி |
பிறந்த தேதி | : |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 19-Apr-2015 |
பார்த்தவர்கள் | : 297 |
புள்ளி | : 15 |
பொறியியல் பட்டதாரி
முயன்றால் முடியாதது ஏதுமில்லை
பலமுறை முயற்சித்தும் எனக்கு வெற்றிகிட்டவில்லை
வெற்றிக்காக செய்த தியாகங்கள் கொஞ்சமில்லை
வேலைக்காக நான் ஏறாத இடமுமில்லை
உண்ண உறங்க நேரமில்லை
வாழ்க்கையை பற்றி சிந்திக்க முடியவில்லை
நான் எழுதாத தேர்வுமில்லை
வேலைதேடி ஊரூராக திரிந்ததால்
இன்று விண்ணப்பம் வாங்க காசுமில்லை
அயராது உழைக்கிறேன் ஓய்வின்றி படிக்கிறேன்
தோல்வி தவிர எதுவும் கிட்டவில்லை
படிக்காதிருந்தால் நான் சிற்றாள் ஆகிருப்பேன்
பொறியாளன் ஆனதால் வேலையின்றி தவிக்கிறேன்
படிக்கும் போது ஊரெங்கும் மதிப்பு
இன்று வேலையின்மையால் நான் சம்பாதித்தது வெறுப்பு
நான் தோல்விக்கு நண்பன் ஆனேன்
வெற்
கல்விக்கண் திறந்தே கர்மவீரே
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவரே
தன்னலமற்று தொண்டாற்றிய தலைவரே
கதர் ஆடை பிரியரே
நீ வழங்கிய இலவச கல்வி இன்று வியாபார பொருளாய்
நீ வழங்கிய வாழ்க்கை கல்விக்கு மாற்றாக
இன்று புகுத்தினர் அடிமை கல்வி
அன்றைய கல்வி முறையின் நோக்கம் அறிவு வளர்ச்சி
இன்றைய கல்வி முறையின் நோக்கம் அதிக தேர்ச்சி
அன்று உன் ஆட்சியில் ஊரங்கும் பள்ளிகூடங்கள்
இன்று தெருவெங்கும் மதுக்கூடங்கள்
உன் ஆட்சியில் அநீதி என்ற சொல்லேயில்லை
இன்று அநீதி தவிர வேறுஎதுவுமில்லை
இன்று கர்மவீரருமில்லை மகாத்மாவுமில்லை
இந்தியாவை காப்பாற்ற எவருமில்லை
போராட மனமிருந்தும் முடியவில்லை
நீ வாழு
அதிகாலை பத்து மணிக்கு
துயிலெழுந்து சோம்பல் முறித்து
மெதுவாய்ப் பல் துலக்கி
வேகமாய் வண்டியெடுத்து
வெளியில் கிளம்பினான் அவன்...!
அழகுக் கலை பயின்று
அழகு நிலையம் நடத்தும் நண்பனிடம்
தன் முடியையும் முகத்தையும்
கொடுத்துவிட்டு புலம்பினான்
"நண்பா உன் நெலமைய நெனச்சா
பாவமா இருக்கு" என்று...!
காலைப் பசி குடலைக் கிள்ள
வயிற்றை நிரப்ப வேண்டி
வண்டியை ஒரங்கட்டினான்
வழியோர துரித உணவகத்தில்...!
சமயற்கலை பயின்ற நண்பனிடம்
அது இது என்று கேட்டு வாங்கி
ருசித்துப் புசித்த பின் புலம்பினான்
"உங்க அப்பாட்ட சொல்லி பெரிய
உணவக உரிமையாளர் ஆகிவிடேன்டா" என்று...!
காற்றிலே பறந்த
நாற்று நட்ட கைகள் எங்கே
கழனியில் தடம் பதித்த கால்கள் எங்கே
ஏறு பூட்டிய கைகள் எங்கே
வரப்பு மிதித்த கால்கள் எங்கே
உழுதிட்ட மாடுகள் எங்கே
விவசாயம் செய்த உழவன் எங்கே
பயிரிட்ட வயல்கள் தான் எங்கே
இயற்கையை தொழுதிட்ட மனிதர் எங்கே ???????
பூமி தாய்க்கு விஷமிட்ட வீணர்கள்
பூமி தாயின் ரத்தத்தை உறிஞ்சிய விஷமிகள்
முப்போகம் விளைந்திட்ட நிலத்தில்
ரசாயணத்தால் எத்தனை விளைச்சல்கள்!!!!!!!!
பூமி தாயின் பால் பருகிய விவசாயிகள் மத்தியில்
பூமி தாயின் உடலை உண்ணும்
விஷமிகள்
இன்றைய விவசாயிகள் ???????
பாசம் காட்டிய பொக்கை வாய் பாட்டியின் அழகு
முகசாயமிட்ட பேத்தியின் முகத்தில் தெரியவில்லை
பாட்டி தன் பேத்தியை தோளில் சுமந்தாள்
பேத்தி தன் குழந்தையை இயந்திரத்தில் தள்ளி சென்றாள்
பாட்டி அரிசி மாவில் கோலமிட்டாள் முற்றத்தில்
பேத்தி கோலமிட்டாள் ரசாயணத்தால் தன் உடலில்
அன்று பாட்டி அணிந்தாள் கந்தல் ஆடை வறுமையால்
இன்று பேத்தி அரை குறை ஆடை அணிகிறாள் செல்வ செழிப்பால்
பாட்டி தள்ளாடினாள் வயோதிகத்தால்
பேத்தி தள்ளாடுகிறாள் போதையால்
பெற்றொரை வேட்கப்படவைக்கும் இளம் தலைமுறை
போதையால் பாதைமாறும் இளம் தலைமுறை ???
நாற்று நட்ட கைகள் எங்கே
கழனியில் தடம் பதித்த கால்கள் எங்கே
ஏறு பூட்டிய கைகள் எங்கே
வரப்பு மிதித்த கால்கள் எங்கே
உழுதிட்ட மாடுகள் எங்கே
விவசாயம் செய்த உழவன் எங்கே
பயிரிட்ட வயல்கள் தான் எங்கே
இயற்கையை தொழுதிட்ட மனிதர் எங்கே ???????
பூமி தாய்க்கு விஷமிட்ட வீணர்கள்
பூமி தாயின் ரத்தத்தை உறிஞ்சிய விஷமிகள்
முப்போகம் விளைந்திட்ட நிலத்தில்
ரசாயணத்தால் எத்தனை விளைச்சல்கள்!!!!!!!!
பூமி தாயின் பால் பருகிய விவசாயிகள் மத்தியில்
பூமி தாயின் உடலை உண்ணும்
விஷமிகள்
இன்றைய விவசாயிகள் ???????