கர்மவீரர்

கல்விக்கண் திறந்தே கர்மவீரே
ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டவரே
தன்னலமற்று தொண்டாற்றிய தலைவரே
கதர் ஆடை பிரியரே
நீ வழங்கிய இலவச கல்வி இன்று வியாபார பொருளாய்
நீ வழங்கிய வாழ்க்கை கல்விக்கு மாற்றாக
இன்று புகுத்தினர் அடிமை கல்வி
அன்றைய கல்வி முறையின் நோக்கம் அறிவு வளர்ச்சி
இன்றைய கல்வி முறையின் நோக்கம் அதிக தேர்ச்சி
அன்று உன் ஆட்சியில் ஊரங்கும் பள்ளிகூடங்கள்
இன்று தெருவெங்கும் மதுக்கூடங்கள்
உன் ஆட்சியில் அநீதி என்ற சொல்லேயில்லை
இன்று அநீதி தவிர வேறுஎதுவுமில்லை
இன்று கர்மவீரருமில்லை மகாத்மாவுமில்லை
இந்தியாவை காப்பாற்ற எவருமில்லை
போராட மனமிருந்தும் முடியவில்லை
நீ வாழும் போது நான் பிறக்கவில்லை
இருந்தும் உன் புகழ் பாட என் மனம் மறுக்கவில்லை
மீண்டும் என்று பிறப்பாய் என்ற எதிர்பார்ப்புடன் உன் மக்கள்

எழுதியவர் : அஜய் ஹ கே (16-Jul-15, 10:54 pm)
சேர்த்தது : அஜய் ஹ கே
பார்வை : 1297

மேலே