என் முத்தத்தினால் சொல்வேன் !

உயிர் பெற்ற ஜீவனான
என்னை மட்டும் அல்ல
இங்கே பிறக்கும் அத்தனை
குழந்தைக்கும் தாய் மடி
கொடுத்தாய் நான்கு
கால்களில் தவள !

புரியாத பாசை பேசிய
எங்களை தாய் மொழியாம்
தமிழில் என் அன்னையோடு
உன்னையும் அன்போடு
"அம்மா" என்றழைக்க
தாய் மொழி கொடுத்தாய் !

இருகால்களில் எங்கெங்கோ
அவசரமாய் நடக்கும் போதும்
நான்கு சக்கர இரு சக்கர வாகனங்களில்
செல்லும்போதும் உன்னை
காயப்படுத்தியும் அன்போடு என்
பிள்ளை என்று தாங்கிக்கொண்டாய் !

ஏதோ ஏதோ முறைகளில்
உன்னை காயப்படுத்தி இருக்கிறோம்
இருந்தும் சிரித்து கொண்டு
வள்ளலாய் மாறி இன்னும்
கொடுக்கிறாய் அளவற்றதை
வாரி வழங்கும் வள்ளல் நீயோ !

பச்சை புல்களும் காற்றில்
அசையும் மரங்களும் ஓயாது
ஓடும் நீரும் உன் சுவாசத்தோடு
கலந்த காற்றும் எம்குலத்துக்கு நீ
கொடுத்த வற்றாத செல்வம்
நீயும் விளையாடுகிறாய்
குழந்தைகளோடு கல்லா மண்ணா !

நாலு காலில் நடை பழகி
நாலு காலில் போகும் வரை
இடம் கொடுத்து மொழி
கொடுத்து இன்னும் எத்தனையோ
செய்து கடைசியில் உயிர் அற்ற
என் உடலையும் உன் சுவாசத்தோடு

கலந்து என் பிறவி மோட்சமும்
உன்னுடனே அன்றைய நேரத்தில்
என் தாய்க்கு நன்றி சொல்ல
உயிர் காற்றோடு இருக்கும் போதே
சொல்லிக்கொள்கிறேன் என் தாய்
மண்ணிற்க்கு என் தமிழ் மொழிக்கு

நன்றிகள் சொல்கிறேன் ஏற்றுக்கொள்
என் முத்தத்தினால் !

எழுதியவர் : dpa (5-May-11, 9:26 pm)
சேர்த்தது : deeps
பார்வை : 417

மேலே