சாதி

வாழும் பொழுது சாதியை பார்க்காதே
சாவதற்குள் எதாவது சாதிக்க பார்

பிறந்த தேதி வைத்து ஜாதகம் பார்க்காதே
இறக்கும் தேதி வருவதற்குள் சாதிக்க பார்

சாதி சாதி என்று செத்து மடிவதைவிட
சாதித்து விட்டு செத்து மடிவது எவ்வளவோ மேல்

விளையும் பயிரும்
மலரும் பூவும்
வீசும் காற்றும்
பொழியும் மழையும்
சாதி பார்த்திருந்தால்
மனுக்குலம் என்ன ஆகி இருக்கும்
சடலம் தான் அல்லவா?

சாதிப்பவன் ஒரு சாதியும்
சாதிக்க மறப்பவன் மற்றொரு சாதியும்
உலகில் இவ்விரண்டு சாதிகளே இருந்திருந்தால் எவ்ளவோ சாதனைகள் இடம்பெற்றிருக்கும்
உலகமும் வளம் பெற்றிருக்கும்.

எழுதியவர் : jonesponseelan (7-May-15, 10:11 am)
Tanglish : saathi
பார்வை : 122

மேலே