என்னவனே நம் ஆயுள்வரை - சகி

என்னவனே
என்னைக்கடந்து செல்லும்
ஒவ்வொரு நொடிகளும்
ஒவ்வொரு நிமிடங்களும்
ஒவ்வொரு மணிநேரங்களும்
ஒவ்வொரு தினங்களும்
ஒவ்வொரு வருடங்களும்
நீண்டுக்கொண்டே செல்கிறது ...................
உன் நினைவில்
என்னுள்ளே இதமாய் ................
நம் காதலையும்
காதல் நினைவுகளையும்
எண்ணி எண்ணி..................
உன்னவள் ஆயுள்நாட்கள்
நீண்டுக்கொண்டே செல்கிறது .............
வார்த்தைகள் ஆயிரம் உண்டு
அனைத்தும் சொல்ல .............
ஏனோ .........
அவைகளை கிறுக்க
மனமில்லை கவியாய் ...............
உன்னிடம் சொல்ல என்
காதல் மொழிகள் பயணமாகும்
தருணங்களில் ..............
என் விழிகளின் ஓரங்களில்
நம்காதல் கண்ணீராக
என்னில் என்றுமே .............
உன் அன்பை நான்
உணரும் தருணமெல்லாம்
என் உள்ளுணர்வுகள் மட்டுமே
உணரும் உன் காதலை ...............
நம் ஊடலில் உயிர் விடவும்
தயாரானேன் .............
உன் பிரிவை
தாங்கும் மனமில்லாமல் .............
ஆனால்..........
உயிர் விடவே ஆசை ..............
என்னவனே உனக்காகவே .............
என் மீது நீ கொண்ட நம் காதலையும்
உன் மீது நான் கொண்ட நம் காதலையும்
அன்பு காதலர்களாகவும்
அன்பு கணவன் மனைவியாகவும்
என்றுமே காதலிப்போம்
நம் ஆயுள்வரை ..................