எனக்கான எல்லாமும் நீ

சாமி என்றழைத்த போதிருந்து
தாயாய் தோன்றினாய்

தேடலில் தொலைந்து
காதலில் கரைந்து
வாழ்க்கையின் வலிகளை
பகிர்ந்து கொண்ட போது
நண்பனானாய்

எனக்கான நீயாய்
எல்லாப் பொழுதுகளிலும்
எனைப் புரிந்துக்கொண்ட போது
தந்தையானாய்

ஆயிரம் திட்டுக்களையும்
அனாவிசயமாய்
வாங்கிக்கொள்கிறேன்

'என்ன'
என்றுக் கேட்கும்
உன் ஒற்றை வார்த்தையின்
அழுத்தத்தை
ஏற்ப்பதற்கில்லை
என் நண்பனே..

எழுதியவர் : மகாலட்சுமி (9-May-15, 6:52 pm)
பார்வை : 112

மேலே