ஏழைக் கவிதைகள்

எனக்குள் கர்ப்பமாகி..
எனக்குள்ளேயே கரைந்துவிடும்-எனது
எழுத மறந்த கவிதைகளில்...
எனக்கு மட்டுமே தெரிந்த
என் சில விம்பங்களும்
புதைந்து விட.... -நான்
செய்வதறியாது தவிக்கின்றேன்.

எனக்கென நேரமொதுக்க
எனக்கே நேரமில்லை.. -பாவம்
என்ன செய்யும்? -என்
ஏழைக் கவிதைகள்.

-ரஞ்சித் குலசிங்கம்-

எழுதியவர் : ரஞ்சித் (9-May-15, 5:30 pm)
Tanglish : aelaik kavidaigal
பார்வை : 126

மேலே