நீதிமன்றமா போலிமன்றமா

நீதிமன்றமா? போலிமன்றமா?
நீதி மன்றங்களே
அங்கே நடப்பது
வாழக்குகளா???
வியாபாரமா??
நீங்கள் நீதி அரசர்களா?
இல்லை கேடி அரசர்களா?
நிரூபிக்க படாத
குற்றத்திற்கே
செல்லைக் காட்டி
சிறைசேதம்
செய்தீர்களே!
தீர்ப்பளிக்கப்பட்ட
குற்றவாளிக்கு
பேருக்கு பினைதந்து
விடுதலையும் உடன்
தந்தது எவ்வாறு??!
வசதிக்காகவே
நீதிதேவதையின் கன்களை
கறுப்புத் துணி கொண்டு
கட்டிவிட்டு - உங்கள்
கண்களை காசுகொண்டு மறைத்தீரோ?!
ஒருவேளை
நீதி மன்றத்திலேயே
நீதி சமாதியானதோ!
சந்தேகத்தை
குற்றவாளியை காப்பாற்றி
தீர்ப்பின் மூலம் தீர்த்துள்ளீர்!
நாமோ
நீதி தேவதையிடம்
கொடுத்தது தராசு தானே!
அதுதான்
சாட்சிக்கும் காசுக்கும்
எடைபோட்டு விடை கொடுக்கிறது!
ஒருவேலை கத்தியை
கொடுத்திருந்தால் குற்றவாளியை
கொய்திருப்பாள் போலும்!
இனியேனும் உணரும்
மக்களே!
நீதியை
நாதியற்று நடுத்தெருவில்
நிறுத்திய இவர்கள்
நீதி அரசர்கள் - அல்ல
அரசாளும் அயோக்கியோக்கியர்களின்
அடிவருடிகள்!
அங்கே நடப்பது
வழக்குகள் அல்ல
வாய்தாக்கள்!
கிடைப்பது
நீதியும் அல்ல
வியாதிகள் - நீதிதேவிக்கு!
#red