ஒன்றுபடுவோம் உரிமைவெல்வோம் - கயல்விழி

குண்டுமழையிலும்
குருதி வெள்ளத்திலும்
ஈழத்தமிழர் அழிகையில்
தலைகவிழ்ந்து நின்றான் கோழைத்தமிழன்...

€€€€€€€€€€€€€€€€€

ஐக்கிய நாடுகள் அர்த்தமற்று
போகையில்
அயல்நாடுகள் ஆஹாஹா
ரசித்தன..

€€€€€€€€€€€€€€€€

அன்னையினதும் தங்கையினதும்
அம்மன அணிவகுப்பை
கண்ணெதிரே கண்ட அன்றைய
ஆணுறுப்பு அறுக்கப்பட்ட ஈழத்தமிழனின் துடிப்பை
ஊமையாகி வேடிக்கை பார்த்தது உலகம் .
€€€€€€€€€€€€€€€€€€€€€€ ்

இறந்த உடல்களைகூட இச்சைக்கொண்டு எச்சில் படுத்தியது
காமவெறி பிடித்த கழுகுகள் .

€€€€€€€£€€€€€€€€€€€€€€

கட்டபொம்மனை போல்
பட்டுத்தலைவனையும்
காட்டிக் கொடுத்த எட்டப்பன்கள்
கூடிக்களித்தனர் ஈழ அழிவினை .
€€€€€€€€€€€€€€€€€€€€€

இழப்பினை தாங்கி
எமனோடு போராடி
மிஞ்சிய உயிர்கள் இன்று
நெஞ்சிலே நெருப்பினைக்கொண்டு
வாழுது பலதுயர்கள் கண்டு .
€€€€€€€€€€€€€€€€€€€€€

அவருக்காக
கண்ணீர் அஞ்சலிகள் வேண்டாம்
கறுப்புக்கொடிகளும் வேண்டாம்
மறக்குலந்தோர் நாங்கள் .
மறைந்து திரிதலும் வேண்டாம்

€€€€€€€€€€€€€€€€€€€€€€€€

தாய்மானம் காக்க வேண்டும்
தரணி
தமிழனை போற்றிட வேண்டும்
உரிமைகள் வென்றிட வேண்டும்
முதலில் நாம்
ஒன்றுபட வேண்டும்..
€€€€€€€€€€€€€€€€€€€.

எழுதியவர் : கயல்விழி (16-May-15, 3:50 pm)
பார்வை : 991

மேலே