கனவை கடத்திப் போகிறார்கள்-------அஹமது அலி----

என் கனவுகள்
சயனத்தின்
சாயல்களல்ல
லட்சியத்தின் வேர்கள்...
=
நினைவுகளின்
போன்சாய்
நனவுகளினால்
விருட்சம்..
=
ஒவ்வொரு
சந்தர்ப்பத்திலும்
வேட்கை கொண்டு
பாய்கிறது...
=
புறப்படும் முன்
ஆகாயம்
அடைக்கப்படுகிறது...
=
அடிமைகளின்
ஆசைகள் போல்
அகத்துள்
அடிமைப்பட்டது..
=
அடிமைச் சிறையையும்
உடைத்துப் பார்க்கிறது
ஒரு சில சமயங்களில்...
=
மொழி வழி
மனுச் செய்தும்
புரியாத மொழியென
தள்ளுபடியாகிறது...
=
வளர்கனவின் சிறகுகளை
பெற்றவர் உற்றவர்
நண்பர் பகைவர்
பாரபட்சமின்றி
கடத்திப் போகிறார்கள்...
=
ஏழுகடல்
ஏழுமலை தாண்டி
எங்கோ தூரத்தில்:

அரேபிய இரவுக் கதை போல்
எனதும்.......

எழுதியவர் : அலிநகர்.அஹமது அலி (18-May-15, 7:05 am)
பார்வை : 205

மேலே