இனிது இனிது
ஒவ்வொரு நாளும்
கற்றுக் கொள்கிறேன்
பாடும் குயிலின் குரல் இனிதென்று..
தினமும் தினமும்
கற்றுக்கொள்கிறேன்
நம்பிக்கை வானிடம்
நற்கொடை இனிதென்று...
மழலைகளைக் காணும்பொழுதெல்லாம்
கற்றுக் கொள்கிறேன்
குழவியாக மாறிடல் இனிதென்று...
ஒவ்வொரு காலமும்
கற்றுக்கொள்கிறேன் மேகத்திடம்
பெருந்தன்மை இனிதென்று....
கடையில் ஒருமுறை பலமுறை
கற்றுத் தெளிகிறேன்
வனத்தில் வாழும் மிருகங்களிடம்
மனிதநேயம் இனிதென்று...!