எதுவுமே நடக்காததுபோல்

நெருப்பில் விழுந்த ....
நெய் போல் உருகுதே ...
என் மனம் உயிரே ....!!!

நீ கூடவும் ..
நான் ஊடவும்....
நடக்கும் திருவிழாவில் ...
எல்லாம் முடிந்தபின் ...
எதுவுமே நடக்காததுபோல் ....
மனம் நினைக்குமோ ....?
+
குறள் 1260
+
நிணந்தீயில் இட்டன்ன நெஞ்சினார்க்கு உண்டோ
புணர்ந்தூடி நிற்பேம் எனல்.
+
நிறையழிதல்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 180

எழுதியவர் : கே இனியவன் (28-May-15, 8:43 am)
பார்வை : 53

மேலே