என்றும் உன் நினைவுடன்

என்னவனே....!!!!!!
உன் புன்னகையை மறைந்து நின்று பார்க்க ஆசை ...
உன் கால்பதிவில் என் கால் பதிக்க ஆசை ...
உன் கைகோர்த்து நடக்க ஆசை..
உன் தோல் மீது சாய்ந்து உறங்க ஆசை..
உன் விழியில் என் கண்கொண்டு உன்னை ரசிக்க ஆசை..
உன் கன்னத்தில் முத்தமிட ஆசை...
உன் மார்பில் தலை சாய்க்க ஆசை...
உன் சிரிப்பில் என் வலிகளை மறக்க ஆசை ...
உன் மூச்சில் என் உயிர் கரைய ஆசை ...
உன் நினைவில் என்னை மறக்க ஆசை ...
உன் தலைமுடியில் என் விரல்களை மறைக்க ஆசை ...
உன் நெற்றியில் என் இதழால் முத்தமிட ஆசை ...
உன் மார்பினில் என் முகம் மறைக்க ஆசை ...
உன் மனதில் நான் மட்டும் வசிக்க ஆசை ...
என்றும் உன்னவளாகவே ....!!!!!!!!!!
என்னை தனியாக விட்டுவிட்டு
எங்கே சென்றாய் என்னவனே ………?
உன் நினைவுகளை மட்டும் என்னுடன் விட்டுவிட்டு ….???????????
காத்திருக்கிறேன் என்னவனே உனக்காகவே
உன் நினைவுகளுடன் என்றும் ……….
உன் மடியினில் என் உயிர் பிரிய ஆசை
நீ விட்டு சென்ற உன் நினைவுகளுடனே
நீ வருவாய்
என வாழ்ந்துகொண்டே இருக்கிறேன்
தனிமையில் உன் நினைவுகளுடன்……….
உன்னை இன்றும் நேசித்துகொண்டே .........!!!!!!!!!!!
வந்து விடு என்னிடம் ஒரு முறை
என்னை உன் மடியில் சாய்த்துகொள்ள.........!!!!!!!!!!!!
என் உயிரும் பிரிந்துவிடும் உன்னை கண்ட மகிழ்ச்சியிலேயே........!!!!!!!!!!!!!!!!

எழுதியவர் : பிரியா கி (6-Jun-15, 12:06 am)
பார்வை : 1836

மேலே