இதற்குப் பிறகு

இதுக்கு மேல
இங்க இருக்க முடியாதா..
எதையும் பார்க்க முடியாதா..
இந்த உலகம், வீடு, வாசல்,
சொந்தங்கள், நண்பர்கள்,
முன்னேற்றங்கள்..
வாகனங்கள் ..
கதைகள்..
கவிதைகள்..
நிலா..
சூரியன்..
தென்றல்..
மலைகள்..
எல்லாமே இனி..
நான் பார்க்கவே முடியாதா.
எவன் எவனையோ
திட்டினேனே..
எவ்வளவோ சேர்த்தேனே..
அத்தனையும் ஒண்ணுமில்லையா....
இருட்டாயிருக்கிறதே..
மூச்சு முட்டுகிறதே..
மறுபடி பிறக்க முடியுமா..
அப்போது எல்லாம் இப்படியே இருக்குமா..
ம்ம்மா..
..
இப்படித்தான் எண்ணுமோ மனம்..
உயிர் போகும் நேரம்..
எப்பவுமே இந்த மனம் கொண்டு இருந்திட..
இருக்கிறோமே..என்று..
இனிக்கின்றது ..
வாழும் ஒவ்வொரு கணம்!

எழுதியவர் : கருணா (9-Jun-15, 11:05 am)
பார்வை : 127

மேலே