வள்ளுவத்தை மெல்லுவோம்
நன்றி நினை
நன்றல்லது நினையாதே
----------------------------------------
இனிய சொல் இருக்க
கல் பொருக்காதே
----------------------------------------
சின்ன உதவியாயினும்
உதவி பெரியவனாகு
----------------------------------------
காமம் மலர்
சிலருக்கே கனியும்
---------------------------------------
அகத்தில் அன்பிலால்
புறத்தில் புலால்
---------------------------------------
அன்பில்லா மனம்
பாலை மரம்
--------------------------------------
இடுக்கண் என்றதும் போ
இறந்தபின் அல்ல
---------------------------------------
பிறவி கடக்க
இறைவன் கட
-----------------------------------------
அருள் நெஞ்சம்
இருள் இறங்காது
------------------------------------------------
நாவை அடக்காதவன்
நாவால் அடிபடுவான்
--------------------------------------------
கற்ற மனம்
கட்டாயம் ஊறும்
-------------------------------------------
அடக்கம் உய்க்கும்
அடங்காமை மாய்க்கும்
--------------------------------------------
நல்லவனாய் வாழ்பவன்
நாதனாய் ஆள்வான்
--------------------------------------------
நான் எனாதவனை
நானிலம் தொழும்
--------------------------------------------
உள்ளத்தில் மாசின்மை
உலகத்தில் அறம்
--------------------------------------------