தமிழ்-காமத்தின் நாயகன்

அம்மா என்று சொல்லி
ஆசை மறைத்தேன்
என் அம்மாவாய் நீயல்ல...
நீ
என் காதலன்..
என் காமத்தின் நாயகன்...
தலைவன் பிரிந்தால்
தலைவிக்கு துயர் காலையில்
காமப்பெருந்துயர் அந்தி மாலையில்...
எனக்கோ
நீ பிரியாத போதும்
எப்போதும் எப்பொழுதும்
என்னோடு நீ இருக்கும் போதும்
நீருற்றாய் பெருகிற்று காமம்
உன் மொழி ஒலி அழகால்...
அடக்கி நான் காக்க
போட்டு வைத்த அணையெல்லாம்...
"ழ"கரம் உன் "ழ"கரம்
அடடா , ஐயகோ
எப்படி சொல்வேன்
முக்காலமும் தவிக்க வைக்கிறதே
நாற்றிசையும் நாணம் தருகிறதே...
உன் 'ழ' 'ழ' "ழ"கரம் ...
ஓர் எழுத்து
என் அணை உடைத்து
நீ ஆணென்று உரைத்தது
என் பெண்மை தவிக்கிறது...
தமிழே எந்தமிழே
என் காதல்நோய்
காமநோய் இரண்டும்
தீராமல் நான் வாட...
செந்தமிழே
நீ தீண்டு
நான் மலர்வேன்...!!!

எழுதியவர் : ஏஞ்சல் (14-Jun-15, 2:20 am)
சேர்த்தது : ஏஞ்சல்
பார்வை : 229

மேலே