துளிப்பா ஹைக்கூ கவிஞர் இரா இரவி
துளிப்பா ! ( ஹைக்கூ ) கவிஞர் இரா .இரவி !
உற்றுக் கேளுங்கள்
பேசுவது கேட்கும்
மலர்கள் !
இரண்டே நிமிடத்தில் தயார்
என்று சொல்லி விற்றனர்
உயிர்க்கொல்லி !
ஆபத்து
நவீன உடையும்
நவீன உணவும் !
உணர்த்திடும்
அடுத்தவர் வலி
மனிதநேயம் !
மடிகிறார்கள்
மனிதர்கள்
மண் சண்டையால் !
சிறகுகள் இருந்தும்
பறக்காததால்
வாத்து மடையன் !
காற்றுடன்
போராடியே எரிகிறது
மெழுகுவர்த்தி !
அடங்குவதே இல்லை
பணக்காரனின்
பணப்பசி !
ஒளி வர இருள் ஒளியும்
தன்னம்பிக்கை வர
துன்பம் ஒழியும் !
போரில் மட்டுமல்ல
அரசியலிலும் தொடர்கிறது
முதுகில் குத்துதல் !
வேண்டாம் மூட நம்பிக்கை
சனிப்பிணம் கேட்காது
துணைப்பிணம் !
இறுதிப்பயணத்தில்
நெருப்புச்சட்டி ?
மின்சாரத்தகனம் !
புகை வரும்
நெருப்பின்றியும்
பனிமூட்டம் !
கண்கள் இரண்டு அதிகம் பார்
காதுகள் இரண்டு அதிகம் கேள்
நாக்கு ஒன்று குறைவாகப் பேசு !
பூனைகளிடம் பால் காவல்
அரசியல்வாதிகளிடம்
நாடு !
கண்டிக்க வேண்டும்
தவறு செய்தது
அன்பானவரானாலும் !
செவி வழி
சிந்தையில் காயம்
வன்சொல் !
எதையும் சாதிக்க
இனிதே உதவும்
இன்சொல் !
--
.