தோஷம் இல்லா தோஸ்த்து

(கல்லூரியில் நடந்த இசை போட்டிக்காக எழுத பட்ட பாடல் வரி இது)
( முதல் பரிசு பெற்றது )


தோஸ்த்து மச்சி தோஸ்த்து
வாஸ்த்து பாத்து நேரம் பாத்து
நாங்க வளர்ந்தது இல்ல

எவன் வந்தாலும் ம் ம் ம் ....
எமன் வந்தாலும் வெரட்டி அடிக்க மாட்டோம்
வெரைடியாலே அடிப்போம் டா

வானுக்கும் சோகம் முண்டு
எங்கள் நட்பில் என்றும் இல்லை

சேட்லைட்டா சுத்தி வருவோம்
ஹெட்லைன் நியூஸ்ச கூட விடமாட்டோம்

ஹெட்போனா பேச மாட்டோம்
ஹெட்வெய்ட்டா இருக்க மாட்டோம்

நாங்க இருக்கும் இடம் சத்தாமாய் இருக்கும்
எங்கள் மனம் எப்பொழுதும் அமைதியாய் இருக்கும்

விண்மீன் கூட்டம் இல்லை இருந்தும்
எப்பொழுதும் ஜொலித்து கொண்டு இருப்போம்

எழுதியவர் : பன்னீர் கார்க்கி (17-Jun-15, 4:27 pm)
சேர்த்தது : பன்னீர் கார்க்கி
பார்வை : 163

சிறந்த கவிதைகள்

மேலே