ராஜன்ஜி யின் தலைமுறைகளின் விரிவு

இரை கொடுத்தது யார் ?
சிறகடிக்கக் கற்றுக் கொடுத்தது யார் ?
மறந்து முதியோர் இல்லத்தில்
பரிதவிக்க விட்டு விட்டு
அந்திம நேரத்தை எண்ணிக் கொண்டிருப்போரை
ஏதோ ஒரு அந்தி மலையில் சந்தித்து
கை நிறைய சாக்லேட்டுகளை திணித்து
குழந்தைகளை அணைப்பதற்கு கூட அனுமதிக்காமல்
பறக்கும் முத்தம் தரச் சொல்லி
பறந்து போவதுதான் தலை முறைகளின்
செய் நன்றியோ ?
---கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (17-Jun-15, 5:14 pm)
பார்வை : 120

மேலே