தோழர் யுகபாரதி விருது -2015

தோழமை நெஞ்சங்களே...!!
வணக்கமும் வாழ்த்துக்களும்....


இத் தளம் தமிழுக்கு அளப்பரிய தொண்டாற்றி வருகிறது...

எத்தனை படைப்பாளிகள்...
விதவிதமான படைப்புகள்...
வாதங்கள்.. விவாதங்கள்... விதண்டா வாதங்கள்.....
உவகை ஊர்வலம்...உற்சாக துள்ளல்கள்...

வருத்த நொடிகள்... வாழ்த்திய உதடுகள்....
வசவு மாலை பெற்ற தோள்கள்...

எனது குருதி தோழன் சேகுவாரா பெயரில்
நிலா நிகழ்த்திய சூரிய கவிதைப் போட்டி...
உழவன் பெருமை பறை சாற்றும்
உயரிய கவிதைப் போட்டி...
வாகை மாலை வென்ற தோள்கள்...
முத்தாய்ப்பாக ...., முதன் முதலாய்
ஒற்றுமை ஒளிவிடும் ஒரு தொகுப்பு ...
(யுத்தத்தின் சுவடாய் .நான் மட்டும் போதும்.).

மணவாழ்வில் நுழைந்துள்ள நமது தோழர்கள்..
(பிரியா இணையர்...கலை-பிரியா காதலர் இணையர் ....ஈஸ்வரன் ராஜாமணி இணையர் ..தம்பு இணையர்.......தோழர் தமிழ்தாசன் இணையர் ..)

எல்லாவற்றிலும் நமது
அனைவரின் பங்கேற்பு.. பங்களிப்பு..வாழ்த்து...

பிரமிப்பின் பிடரியில்
எனது ஆயுள் அசைவு...

தேடினாலும் கிட்டாத
தோழமைத் தோள்கள்.
தூக்கிப் பிடித்துக் கொண்டாடிய
தோழன் அபியின் சிறுகதைகள் திறனாய்வு ...
சக எழுதுகோல்களின் நுனிகளுக்குப் .
சாமர ஒத்தட இறகுகளாய்
கவித்தாசபாபதியின் கட்டுரை முனைப்பு ...

உலகத்திற்குள் ஓர் உலகு நம்முடையது...
இந்த உலகில் விடியலும் இல்லை
அஸ்தமனமும் இல்லை...
உறங்கா சூரியன்
உலாவரும் உலகு இது..

இவ்வுலகில்
சிறந்த படைப்பாளிகள் பட்டியல் பவனி வரும் ....
அவனி முழுதும் அழகை அவர் மீது தூவும்...
பல பிரிவுகள் ..பல வாழ்விட படைப்பாளிகள்...
பாராட்டு பல்லக்கில் ஊர்வலமாய் ....

மகாகவி ஈரோடு தமிழன்பன் விருதளிப்பு
நமது
அடுத்த தொகுப்பு வெளியீட்டு விழாவில்....
அறிவிப்பு சில நாட்களில்...!!!.

காத்திருங்கள்...களிப்படைய
கை (கோ)சேர்த்து காத்திருங்கள் கரவொலி எழுப்ப...

தோழர் யுகபாரதி விருது -முதல் விருது - இவருக்கே ...

குன்றுயர் மாமணிகள் பலர் இவ் அவனியில்
நன்று உன் சேவையென நாளும் வாழ்த்தும்
மன்றமென இத்தளம் வளர்ந்துயர் புகழ் பெற
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

கன்று என வந்தோற்கு களம் அமைத்து
நன்று வளர்த்து நானிலம் போற்ற
என்றும் புகழ் பல பெற்றிட அழகிய
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

கவனிக்கிறது உன் சேவையை நானிலம்..
அவனி முழுதும் நம் அழகுத் தமிழின்
பவனி .வந்திட வாழ்ந்திட வளர்ந்திட
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

சீறிப் பாயும் சீற்றத் தமிழ் -உயர் காதல்
ஊறி மேவும் வாலிபத் தமிழ் -மண்ணில் மானுட
அன்பு மேவும் தோழமைத் தமிழ் வளர
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

பித்தன், பரிசு வென்றான்,நடுநிலையாளன்
தத்தித் தவழ் வாசகன் என பன்முகம் அளித்து
தித்திக்கும் தமிழ் புவி திசையெங்கும் வளர
மென்பொருள் படைத்தளித்து சேவையாற்றுவதால் ,

புவியெங்கும் உன் சேவை அறிமுகம் --தமிழில்
கவி பலர் உன்னால் இங்கு சரிசமம் --எனவே
அளிக்கின்றோம் தோழர் யுகபாரதி விருது
துளிர் விடும் முதல் விருதுனக்கே பெற்றிடுவாய் .


நமக்கெல்லாம் நமது கற்பனை குதிரை ஓட –தமிழ்
மணக்கும் களம் படைத்தளித்து நற்சேவையாற்றும்
ராஜேஷ்குமார் பெறுகிறார் இவ்விருது :

"யுகபாரதி விருது -2015"


(தொடரும் )



அன்புடன் அகன்

எழுதியவர் : அகன் (18-Jun-15, 4:46 pm)
பார்வை : 206

மேலே