உற்ற பிணியின் அடையாளம்

கற்ற கல்வியில் சிறக்கவில்லை
காரணம் ஏனென்று  அறியவில்லை
மற்றவர் மத்தியில் மதிப்பில்லை
மறந்தும் நற்செயல் புரிவதில்லை

சுற்றம் நட்பின் அறிவுரைகள்
சற்றும் கருத்தில் பதிவதில்லை
வெறுமை வாழ்க்கை வாழ்ந்தாலும்
பொருட்டாய் எதையும்  கொள்வதில்லை

அரசியல் சினிமா அரட்டைகளும்
அறிவற்ற அலைபேசிப் பிதற்றல்களும்
பயனற்ற இணையப் பகிர்வுகளும்
அன்றாட வாழ்க்கைப் பணிகளாகும்

இற்றை நாளில் இதுபோல
இளையர் பலரும் திரிவதுதான்
உற்ற பிணியின் அடையாளம்
உதவாது நாட்டிற்கு ஒருபோதும்

சிறுமை  கொண்டு வாழ்வதிலே
சிறிதும் நமக்குப் பயனுளதோ!
அறிவை ஆற்றலைப்  பெருக்கியே
வாழ்வதில் ஏதும் குறையுளதோ!

எழுதியவர் : குழலோன் (21-Jun-15, 9:13 pm)
பார்வை : 86

மேலே