பேஞ்சாக்கா மழைத்துளியோ மண்ணோடு

பேஞ்சாக்க மழைதுளியோ மண்ணோடு ..
நான் வாழ்தாக்க வாழுறது உன்னோடு ..
சாஞ்சாக்க சாயுறது உன் தோளோடு..
மூச்சி ஓஞ்சாக்க ஓய்வது உன் மார்போடு ..
என் ஏத்ததுக்கும் எரக்கத்துக்கும்
என்ன கொர .?
நான் சேத்துக்குள்ள பூத்து வந்த
செந்தாமர .
உன்ன ஒரு தலையா காதலிச்சா
தறுதலையா சொல்லு தொர ..
(பேஞ்சாக்க மழைதுளியோ )

சொத்துபத்து வேணுமுன்னு உன்ன கேட்டாளா .?
பத்துகாசு நெத்திப்பொட்டு போதும் கண்ணாளா......
காத்து மழை குளிருகொரு கம்பளி கேட்டாளா .?
கட்டிக்கிட்டு அணைக்கும் வெப்பம் போதும் கண்ணாளா ......
கால் வளர்ந்த ஆம்பிளையே........
கால் வளர்ந்த ஆம்பிளையே கண்ணெடுத்து பாரு
என் கண்ணுக்குள்ள நீரு..
நான் கட்டி வைச்ச கற்பு எல்லாம் கொட்டிதறேன் கூட இரு ...
(பேஞ்சாக்க மழைதுளியோ )

மூனுமுடி கயிறு போட்டா நான் உன் பொண்டாட்டி..
மூனுமொல கயிறு வேணும் நீ இல்லாட்டி.....
கட்டிக்கிட்டு காதல் பண்ண எண்ணம்
வராட்டி ..
எட்டி இரண்டு வார்த்தை சொல்லு என்னை பாராட்டி ..
அத்துவான காட்டுக்குள்ள ............
அத்துவான காட்டுக்குள்ள ஒத்தையில இருக்கேன் ..நான் உன்னை நம்பி இருக்கேன்...
உன் எச்சி சோத்த பிச்ச கேட்டு ரா பகலா நான் கெடக்கேன் .

(((பேஞ்சாக்க மழைதுளியோ )))


செம செம பாடல் .என் மனம் கவர்ந்த varigal .

எழுதியவர் : வைரமுத்து ஐயா (21-Jun-15, 10:21 pm)
பார்வை : 153

மேலே