உண்மையில் நானும் ஒருவித பைத்தியம் தான்

ஏதோ கிறுக்கிக்கொண்டிருந்தேன் .
ம்ம்ம் கவிதையாம் .
பைத்தியகாரி
எனக்கு நானே வசைப்பாடிக்கொண்டேன் .
பர்மா கொடூரத்தை தடுக்க நினைத்தேனா.?
ஓடுகின்ற குருதி ஆற்றை நிறுத்த நினைத்தேனா .?
ஒடுக்கப்பட்ட இனங்களுக்காய்
ஓயாமல் உழைத்தேனா .?
இல்லை
பறிக்கப்பட்ட உரிமைகளை
பாதியேனும் கொடுத்தேனா .?
பாலியல் கொடுமைகளுக்கு நீதி
கேட்டேனா.? - இல்லை
பாதிக்க பட்டவர்களுக்காய் போராடி மாண்டேனா.?
சாதி மதம் வேண்டாம் என்று
ஐ.நா .சபை சென்றேனா .?
அங்கு
அடக்குமுறை வேண்டாம் என்று
அதிரவைத்து வென்றேனா.?
அரசியல் சாக்கடை என்று அறியாமல் இருந்தேனா .?
அறிந்து அதற்கு ஐயா,சாமி
போடாமல் சென்றேனா .?
ஏழைகள் மேல் இரக்கம்கொண்டு
என் இருப்பிடம் அழைத்தேனா .?
என்னிடம் இருப்பதை கொடுத்துவிட்டு
அவர்கள் போல் வாழ்ந்தேனா .?
எதுவுமே செய்ததில்லை இதுவரை இந்த கன்னி .
இதைகூட கிறுக்கிவிட்டேன்
கவிதை என்று எண்ணி .!!!!