எல்லாம் எனக்காக இருக்கட்டும்
அன்பே.!
நீ சிரிப்பதானால்.!
எனக்காக சிரி
நீ அழுவதானால்.!
என்னை நினைத்து அழு
நீ நேசிப்பதானால்.!
என்னை மனமார நேசி
நீ வெறுப்பதானால்.!
என்னை அடியோடு வெறு
எதுவானாலும் நீ என்பதற்குள்
நான் என்ற நினைவு அகலாமல்
பார்த்துக்கொள்ளடி என் காதலியே.!