சுடும் சூரியனும் - குளிர் நிலவும்

காலையில் கண்கள் விழித்தும்
கதிரவன் ஒளியில்லை
சுடுகிறான் சூரியன் மட்டும் !! .

எங்கே என் தோழன் !
அருகில் தொட்டேன்
அவனும் எழுந்தான் !! .

புதிதாக பறித்த பூக்களின் வாசம்
பனி போனபின் பாதைகழிவுகளின்
படுநாற்றம் !!.

இரண்டும் மறைந்தன !
இரண்டு நிமிடங்களில் .

இனி என்
இந்நாள் தொடக்கம் .

படுக்கையை துடைத்து
பையில் போட்டேன் !
காலணியும் காலடியில் .

நடந்தான் நண்பன் !
தொடர்ந்தேன் நானும் .

சீண்டும் சிறுநீர்மல வாடை !
ஈரமில்லா இடத்தில் இட்டேன் !
நானும் கொடை .

குடங்களின் குத்துச்சண்டை !
குழாய் அடியில்
குடிக்க தண்ணீர் .

பல்லும் மேலும்
பட்டன சுத்தம் .

கேட்டது விடுதியின்
வானொலி சத்தம் .

வாசலில் வண்டிக்கடை !
அங்கு
வாடிக்கை இட்லி வடை .

முடிந்தது காலை கடன் !
தொடங்கியது நாளை கடன் !!

விற்பனை விளையாடும் ரோடு !
விற்பனைகள் தொடங்கின கூச்சலோடு .

தோழன் தேடினான் இடம் !

கண்டதும் விரித்தேன் கடை
வருவது என்னவோ
அது தெரியா விடை !!

வாடிக்கை தான்
வண்டிகளின் சத்தமும்
வாட்டும் புகையும் புழுதியும்.

வாடிக்கையாளர்கள் தான்
இன்னும் வரவில்லை .

காலை கழிந்து
நண்பகல் வந்தது .

விற்ற பொருள்
நான்கு காணோம் !!

அது இட்டதே
எனக்கு அன்னதானம் !

உண்டதும்
உறக்கம் வரும் !

மாலைக்காற்றில்
குப்பையுடன் கூட்டமும்
வந்து எழுப்பும் .

விற்பனை !.

வழியில் வந்தவர்கள்
விழியில் விழுந்தால்
மட்டுமே !!.

கூவி அழைத்தாலும்
வராது !
குளிர்வறை கூட்டம்.

கூட்டத்தின் குரல்
அடைந்தபின் !

விற்பனை கணக்கின்
விடை தெரியும்.

வந்தது விதியென
விடைபெற !

வண்டிக்கடை வாளியில்
கையலும்பி
கரைசேரும் என் நாளும் !.

நிலவு வரும்
தென்றல் காற்றுடன்
பாய்விரிப்பேன் !

கண்கள் உறங்க !!

மீண்டும் ...

விடியும் பொழுதும் !
சுடும் சூரியனும் !.

இதில் ,

எத்திசை எதுவென்று
நான் எவ்வறிவேன் !!

எவர் முகம்
கருப்பென்று !

எப்படி நான் உணர்வேன் !!

இதில் எது கருமை ?

சுடும் சூரியனும் !!
குளிர் நிலவும் !!.

( ~இருள் என்று எண்ணாதீர்.... இவன் வாழ்கையை ~)

எழுதியவர் : கேசவன் புருசோத்தமன் (27-Jun-15, 6:11 pm)
பார்வை : 514

மேலே