என் கண்ணீரின் ஒருதுளி

உன்னைவிட்டு விலகிச்சென்ற
உன் காதலனின் சில கண்ணீர்
துளிகள்.!

காதல் தோல்விக்கும் காதலியின்
துரோகத்திற்கும் வித்தியாசம் உண்டு

தோல்வி காலில் தேள்
கொட்டியதுபோல.!
துரோகமோ கண்ணில் தேள் கொட்டியதுபோல.!

இதில் இரண்டாவது
வலியே எனக்கு.!

உன் காதல் விளையாட்டில்
இருகால்பந்துகள்.! அதில்
இரண்டாவதுபந்தே நான் என்பதை
காலம் தாழ்த்தியே அறிந்தேன்.!
மனம் உடைந்தேன்.!

உன் முதல்பந்தோ உன் பயிற்சிக்கான
பந்தாகலாம்.! நானோ உன் பாதத்தால்
மட்டுமே உதைபட வேண்டும் என
மூச்சைபிடித்து உருண்டோடிய பந்து.!

இன்று பல காயம்பட்டு
மூச்சுக்காற்றை இழந்து இனியும்
நீ உதைத்து விளையாடமுடியாத
கிழிந்த பந்தாகிபோனேன்.!

புன்னகைக்கு புகலிடமாக
உலகமறியா குழந்தையாய்
இருந்தேன்! என்னை கடத்திச்சென்று
காதலிடம் விற்றுவிட்டாயே.!!

கடைசியாக என் அருகில் நீ இருந்தபோது விட்ட உன் மூச்சுக்காற்றையே இன்றும்
நான் சுவாசித்து கொண்டிருக்கிறேன்.!

காற்றில் உன் நினைவு புயலாய்மாறி
வாழைஇலையாய் என் மனதை
தினமும் கிழிக்கின்றதே.!
என் செய்வேன்.??

என்கையில் நீ கட்டிய கடிகாரத்தின்
முள்ளும் நின்றது.! நம் காதல்நேரம்
முடிந்ததின் அறிகுறியோ.?

நான் மட்டுமே உன் கா(த)ல் பந்தாய்
இருந்திருந்தால்.! உன் பாதத்திற்கு
முத்தமிட்டே என் வாழ்க்கை
உருண்டோடியிருக்கும்.!

என் நெஞ்சில் நீ உதைத்த பாதசுவடே
பாதையாய் மாறி போனது..அதிலே
பயணிக்கிறேன் என் வாழ்க்கையை.!

உன்னை மறந்துவிடமுடியாது
பாதையை மறந்தவன் பயணிக்க
முடியாதே.!!

உன்னை நினைத்து எழுதி முடிக்கும்
இந்த கவிதையின் கடைசி
வார்த்தையை நனைக்கின்றது.??

என் கண்ணீரின் ஒருதுளி...

எழுதியவர் : பார்த்திப மணி (7-Jul-15, 7:41 pm)
பார்வை : 719

மேலே