என் காதல் ராட்சசி

அதோ வருகின்றாள்
விழி எனும் வில் சுமந்த
என் மணப்பெண் .
நொடிப்பொழுதில் என்னை வீழ்த்தும்
கொலைகாரி .

உதட்டசைவில் என்னை அடக்கும்
சர்வதிகாரி .
கொடிஇடை அசைத்து
என்னை முடமாக்கும் கொடுமைக்காரி .

சத்தம் இன்றி யுத்தம் செய்யும் தீவிரவாதி .
சிரிப்பிலே சிறைப்பிடிக்கும்
சூனியக்காரி .

மதியை மதி மயக்கும்
மாயாவி
மலர்களும் மண்டியிடும்
அவள் முன் சேயாகி .

புற்கள் சுமக்கும் அவள் பாதம்
சுகமென்று .
புழுக்கள் நினைக்கும் அவள் காலால் மரித்தால் சுவர்கமென்று.

காற்றுக்கும் காதலிக்க கற்றுகொடுப்பாள்
கடல் அலைகளையும் கவிதைகள் பாடவைப்பாள்.

கண்ணில் என்முகம் காணும்வரை
கடவுளாய் அனைவருக்கும் காட்சி தருவாள் .
காதலன் நான் அங்கே தோன்றி விட்டால்
ராட்சசி ஆகி என் உயிர் எடுப்பாள்..!!

எழுதியவர் : கயல்விழி (11-Jul-15, 8:30 am)
பார்வை : 1835

மேலே