காப்பியத்தின் மீது காற்புள்ளியின் காதல்
ஆரம்பம் முதல்
இறுதிவரை
ஆயிரம் முறை
அடியெடுத்தாலும்
அடங்காக் காதலுடன்
அடுத்தடுத்து முளைக்கும்
காற்புள்ளி நான்
காரணம்
காப்பியம் நீ – என் கவிக்கள்வனே !!!
(காதலைக் காதலிப்பவர்களால் மட்டுமல்ல அவர் கவியைக் கடப்பவர்களாலும் உணரமுடியும் இது என் காதல் அனுபவம் )