உறவு ஒன்று உயில் எழுதுகிறது - 21

என்னோடு நீ பேசி
எத்தனை நாளாச்சு நீ யோசி.
என் கண் இமை மூடாத காரணங்கள்
எதுவென்று நீ யோசி.
அன்பைத் தந்த உன் விழிகளில்
அலட்சியம் வந்தது ஏனென்று நீ யோசி.
எப்படி நீ போகலாம்
என் உறவை வீதியிலே நீ வீசி.

கண்ணெதிரில் நான்
கலைந்து போகிறேன்.
தொடும் தூரத்தில் நான்
தொலைந்து போகிறேன்.
இருக்கும் போதே நான்
இறந்தும் போகிறேன்
அடிக்கடி இதெல்லாம் நடக்கிறது.
அருகில் நீயிருந்தும்
அந்நியப் படுத்திக் கொள்ளும் போது.

நீ விரும்பித் தரும்
வலியும் வேதனையும் விட
வேறு எவர் தரும் சந்தோசமும்
எனக்கு பெரியதில்லை.
நான் எப்படி இருக்க வேண்டும்
என முடிவு செய்யும் உரிமை
உனக்கல்லவா... இருக்கிறது.

எழுதியவர் : parkavi (16-Jul-15, 9:34 pm)
பார்வை : 79

மேலே