கோளாறு
கண்ணில் கோளாறு என்றால்
கண் மருத்துவரை அணுகி
கண் கண்ணாடியை
அணிந்து கொள்வதால்
கண் பார்வை தெளிவு பெறுகிறது .
மனதில் கோளாறு என்றால்
மனதில் தோன்றும்
உன்னுடைய தவறான
சிந்தனைகளை
மாற்றிக் கொள்வதால்
உந்தன் வாழ்க்கைப் பாதை
தெளிவு பெறுகிறது .
--கோவை சுபா

