நோன்புப் பெருநாள் வாழ்த்து

வான்மேல் அரும்பும் வளர்பிறை கண்ணுற்று
நோன்பு பெருநாளை நிர்ணயித்து -தேன்போல
தித்திப்பாய் கொண்டாடும் தோழர்கள் யாவர்க்கும்
முத்தான வாழ்த்து முகிழ்ப்பு.
எழுத்தின் பெருநாள் தோழர்கள் அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துகள்.