அவளை கண்டீரா

வான் முகிலே!
வண்ண மயிலே!
வளைந்திடும் நதியே!
வண்டூறும் மலரே!
வெள்ளை நிலவே!
வெண் தாமரையே!
கண்டீரா அவளை!...

உயிரில் கலந்தவள் அல்ல அவள்!
உயிராய் ஆனவள் அவள்...

கார்மேக மழையும் அவள்!
தார் ஒழுகும் வெயிலும் அவள்!

அவள் இல்லா!!
உலகில் எனக்கு
ஏது பகல்!!!

அந்திமப் பூ அவள்...
அதிகாலை சூரியன் அவள்...

மெழுகாய் உருகும்
மேகம் அவள்...
யாழில் சிந்தும்
தேன் அவள்...

ஒலியும்
கைக் கட்டி நிற்கும்
அவளிடம்...
ஒளியும்
தோற்றுத் தான் போகும்
அவளிடம்...

இசையும் அவளிடம்
இசைந்து போகும்!
அசைவும் அவளிடம்
அசையாமல் நிற்கும்!

ஓர் வானின் அடியில்!
ஓர் மண்ணின் மேல்!
வாழும் சாதாரண நங்கை!
அல்ல அவள்!!!


விண் முட்டும்
விடி வெள்ளி அவள்...
தேகம் சிலிர்க்கும்
தென்றல் அவள்...

மல்லிகையின் ராணி அவள்...
சந்திரனின் காதலி அவள்...

சிதறும் முத்தில்!
சிந்தும் அமுது அவள்...

தூரங்களை கடத்தி
சென்றவள் இதயத்தில்!
தொலைவை தொட
முடியாது அவள் பாசத்தில்!

தேவாரம் திருவாசகம்
நிகர் ஆகாது
அவள் மௌன மொழியில்...

கணினியின் கனி அவள்...
அலைபேசியின் அலைக்கற்றை அவள்...

மனோரஞ்சித பூ மலரும்
அவள் இதழில்...
செந்தூரம் ததும்பும்
அவள் பேச்சில்...

வெண்பனி சோலை
அவள் நடக்கும் சாலை!

வெள்ளை காகித மேகம்
வண்ண நூலில் படைத்திட்ட
வானவில் பட்டம் அவள்!
கவிக்கு கவின் அவள்...
குயிலுக்கு குரல் அவள்...

தாகம் தீர்த்திடும்
வெள்ள நீரோடை அவள்!
பாகம் தந்திடும்
தோள்பட்டை சாரல் அவள்!


இறைவனும்
இறங்கி வருவான்
அவள் மடியில் துயில...
மாணிக்கம்
மலர்பாதை
விரிக்கும்
அவள் மதிக்கு..


பிறை சந்திரன்
திரை விரிப்பான்
அவளிடம் கடன் வாங்க..

மரிக்கொழுந்து
மரித்துப்போகும்
மல்லிகை வாசத்தில்...
மல்லிகை அவள் ஆனால்...

செந்தாழம் பாதுகாக்கும்
மாதுளை அவள்...

சலங்கை
சல சலக்காமல்
சிலு சிலுக்கும்
அவள் பாதத்தில்...

பார்த்து பார்த்து
பிரம்மன் படைத்திட்ட
நடக்கும் சொர்க்கம் அவள்...

சொல்லி முடிக்க
முடியாத செந்தமிழ் அவள்!

துடித்திட்ட இதயம்
தடுக்கி விட்ட என்!
அவளுடையதாயின்
நொடி கூட
துடிக்க கூடாது
என்னுள்...
ஏனெனில்
அவள் என் தோழி!!
அவளை கண்டீரா...


~ என்னுயிர் தோழிகளுக்கு சமர்ப்பணம்

எழுதியவர் : பிரபாவதி வீரமுத்து (18-Jul-15, 11:47 pm)
பார்வை : 151

மேலே