பாசக்கயிறு

பசுமை செய்தவன் வாழ்வில்
பாலைவனப் புயல்
ஆங்காங்கே அந்தரத்தில்
அகோரப் பலிகள் .........

வியர்வையை உதிர்த்தும்
வீணாய் போகும் உழைப்பு
விரக்தியில் விவசாயம்
விஷம் இங்கு சகாயம் ...........

அறுவடையில் மிச்சமில்லை
அறுவடைக்கு மிஞ்சவில்லை
விவசாயிகளின் உயிர்
காலன் -கடன் ...........

கூடாரங்களும் ஆதாரங்களும்
கை விட்டுவிட்டன
கலங்குகிறான் ஏழை
கலக்கத்தில் பசுமை ...........

இயற்கைக்கும் எல்லைகோடு
நீர் ஆதாரமில்லாமல்
வறட்சியால் வறுமைக்கு
தத்து பிள்ளைகளாய் விவசாயி ............

ஆண்டுகள் தோறும்
அகோர பலிகள் தொடர்ச்சி -வளர்ச்சி
வலியோடு விவசாயி
வறுமையோடு விவசாயி ..........

பாதுகாப்பிற்கு பலகோடி
பசுமைக்கு தெருகோடி
அரசாங்க ஆதாயமில்லை
விவசாயி வேதனை .............

கோடிக்கு ஆசையில்லை
கோமனமாவது மிச்சமாகுமா
ஏக்கத்தில் விவசாயம் .................


வேதனையோடு கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Jul-15, 8:04 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : paasakkayiRu
பார்வை : 66

சிறந்த கவிதைகள்

மேலே