கேளாய் பெண்ணே

கேடுகள் நிறைந்த உலகத்தில்
கேட்கிறாயா சுதந்திரம் ?
கேளாய் பெண்ணே -
சுதந்திரமும் அளவாய் இருக்கட்டும் ............

மனித உருவத்தில் நடமாடும்
மிருகங்களும் இருக்கின்றன மறவாதே ,
தோற்றங்களும் செயல்பாடுகளும்
மாறுபட்டவை மறுக்காதே ..............

நாகரீகத்தை
அநாகரீகம் அச்சுறுத்துகிறது
அரைகுறை ஆடைகள்
அவ்வளவு நல்லதல்ல ..............

பார்வைகளை பற்றி பழிக்காதே
உலகத்தை சரியான கோணத்தில்
உற்று நோக்குபவர்கள் ஒரு சிலரே ............

வெகுளித்தனம் ஏமாளி தனமாய்
ஆகிவிடாமல் எச்சரிக்கையாய் இரு
பகட்டு வாழ்க்கையில் பயனில்லை ............

சுதந்திரம் சொர்க்கம் என்பது
அனுபவமில்லாதவர்களின் ஆணவ கூற்று
விருப்பங்கள் எல்லாம் சுதந்திரமில்லை ...........

கண்டிப்புகளை அடிமைத்தனமாய் பார்க்காதே
அதிலும் அக்கறை இருக்கிறது
பெற்றவர்கள் விரோதிகள் அல்ல ..........

வருங்கால வரலாறு உன்னால் உருவாக்கப்படுகிறது
தவறுகளை தவிர் ,
சுதந்திரம் சோகங்களாய் ஆகமால்
சுதாரித்துக்கொள் ............

கேளாய் பெண்ணே
இது கேடுகள் நிறைந்த உலகம்
சுயநலம் அதன் சூத்திரம் ............

பூ போன்றவள் நீ
புன்னகையிலும் அளவை வை
புருவங்களால் எச்சரிக்கை செய் ............


கவிஞர் சுந்தர வினாயகமுருகன்

எழுதியவர் : வினாயகமுருகன் (20-Jul-15, 8:39 am)
சேர்த்தது : VINAYAGAMURUGAN
Tanglish : keylaay penne
பார்வை : 54

மேலே