யார் சொன்னது

கலாம் காலமானார் !
யார் சொன்னது !

எப்படி தொட முடியும்
காலத்தை வென்றவனை
காலனால் !

அதோ கை கட்டி காத்து நிற்கிறான்
இன்னும் எம் தலைவனின்
காலடியில் !

மடிந்துவிடவில்லை - அவன்
மரணத்தின் மடியில்
உறங்கிக்கொண்டிருக்கிறான் !
எமக்கான கனவுகளை சுமந்தபடி !

எதற்காக கண்ணீர் சிந்த வேண்டும் !
எங்கோ இறந்துவிடவில்லையே அவன்
இதோ இங்கே இருந்துவிட்டானே
என் இதயத்தில் !

இனியும் சொல்லாதீர்கள்
இப்படி !

கலாம் காலமாகவில்லை
இளைங்கர்களின் எதிர்-காலம் ஆனான் !

எழுதியவர் : முகில் (27-Jul-15, 9:55 pm)
Tanglish : yaar sonnathu
பார்வை : 123

மேலே