நீயில்லை நானும் உன் சக்காளத்தியும்

அந்தி நேரத்திலே
அர்த்த ஜாமத்திலே
வண்டி ஒடயிலே
ஜன்னல் ஒரத்திலே
மழைச் சாரலிலே
குளிர் வாடையிலே
ரசித்து லயித்து
மெய்மறந்து நானிருந்த
இதமான இவ்வேளையிலே
நீயில்லை என்னவளே(!)
என் இன்னல்தனை நீக்கிடவே
வானிறங்கிய
உன் சக்காளத்தி
விடியும் வரை
துணையிருந்தாளே!!

எழுதியவர் : மனதில் பட்டவை சத்யா (30-Jul-15, 1:40 am)
பார்வை : 272

மேலே