ஆர்வமில்லை

நீ என்னைக் காதலித்திருந்தாய்
என்பது மட்டுமே எனக்குத் தெளிவு.
மற்ற எந்த அசைவுகளின் காரணகளையும்
அறியும் அவசியங்கள் எனக்கில்லை.
அறிந்து அருவருப்புடன் வாழவும்
என் மனதுக்கு விருப்பமில்லை.
உனக்குள் நான் வர நான் என்ன
செய்தேன் என்பதுவும் தேவையில்லை.
எனக்குள் நீ ஏன் வந்தாய் என்பதினை
புரிவதிலும் ஆர்வமில்லை.
நட்புக்கு விதை விதைத்திருந்தேன்
விருட்சமாகாவிடினும் வருத்தமில்லை.

எழுதியவர் : jujuma (19-May-11, 3:00 pm)
சேர்த்தது : nellaiyappan
பார்வை : 417

மேலே