ஒரு தலையாய்

ஓரக்கண்னால் பார்த்தவன்
தூரத்திலேயே !

என் அகக்கண்ணுக்கு தெரிந்தது
அவன் புறக்கண்ணுக்கு தெரியாமல் போனதேன் !

உணர்வது உள்ளமாயினும்
உரைக்க உதட்டின் உதவி தேவை தான்.

ஜனனத்திலே தவிக்குது என் காதல்..

புழுக்கம்,
நான் பார்த்த அந்த ஒற்றை கண் வழியே
அழுகிறேன் அவனுக்கு தெரியாமல்!

எழுதியவர் : செல்வமணி (25-Aug-15, 7:19 pm)
பார்வை : 146

மேலே