அப்பா பாசம் அம்மா பாசம்

பாசம் ...
அதற்கும் மொழி உண்டு.

அதை காட்டும் வழி வகைகள்:
கண்கள், வார்த்தைகள்,
செருமல், பார்வைகள்...

மகள் அப்பாவிடம்,
வேண்டியதைப்பெற,
ஒரு பார்வை போதும்!

மகன் அப்பாவிடம்
வேண்டியதைப்பெற,
வார்த்தைகள் மட்டுமில்லை,
சம்மதம் அல்லது சமாதானம்;
இல்லையெனில்
சண்டை சச்சரவு தான்.

ஆனால்,
அம்மாவை பொருத்தவரை:

மகளுக்கு எல்லாமுமே, சில நேரம் தவிர
பெரும்பாலும் கேட்காமலே கிடைக்கும்.

மகனுக்கு ?
பல நேரம் கிடைக்கும்
தேவைக்கேற்ப.
அப்படி சந்தர்ப்பங்களும்
எப்பொழுதும் சாதகமாகி விடும்.

சில வேளை
பாசம் ஜெயிக்கும்
பல வேளை தோற்கும்

பாசத்திற்கு அப்படியொரு
பலம்,
பலவீனம்.

அப்பாவுக்கு பலம் எப்போதுமே பலவீனம்;
ஆனால் அம்மாவுக்கு பலவீனமே பலம்.

இது தான் அம்மா பாசம் + அப்பா பாசம்.
இந்த பாசப் போராட்டத்தில்
அப்பா பாசம், அடையும் தேய்மானம்

அம்மா பாசம் ?
கண்ணீர் வற்றி, மனம் கல்லாகும்போது,
காணாமல் போகலாம்.

அனுபவத்தில் ஒரே ஒரு சோகம்:
அப்பாவுக்கும் அம்மாவுக்கும் இடையே
பின்னாளில் பாசம் வென்னீராகி
கண்ணீரில் கரைந்து கானல் நீராகி விடுகிறது ?

மொத்தத்தில்
கடைசியில் பாசம் உணரப்படும் ஒரு பகவத் கீதை!

ஆனாலும்
அது சிக்கல்களில், சின்ன சின்ன இடைவெளிகளில்
மிகப்பெரிய மௌன யுத்தம் !

அதில் வெல்பவருக்கு தோல்வி தான்,
அது உணர வைக்கும் ஒரு நெருடல்;

புரிந்து கொள்ளவிடாதவரை
வெற்று ஈகோ தலைக்கனத்துடன்
கடைசிவரை போராடி தோற்கும்.

இது தான் பாசத்தின் தலைவிதி !

எழுதியவர் : செல்வமணி (27-Aug-15, 11:52 pm)
பார்வை : 2194

மேலே