உள்ளத்தின் வார்த்தைகள்

என்னிடம் சொல்லாமல்
நீ எங்கோ சென்று வந்த ஒரு நாளில்...

பூக்கள் எல்லாம் எனை பார்த்து முகம் திருப்பிக் கொண்டது இன்று
அவள் இல்லாததால் தான் என்னை பார்க்க வந்தாய் என்று...

என்ன ஒரு கேவலம் எனக்கு...
நீ எங்கு வேண்டுமானாலும் போ ...
போகும் முன் என்னை பார்த்து
சொல்லிவிட்டுப் போனால்தான் என்ன என்று எழுதினேன்.

படித்துவிட்டு நன்றாக இருக்கிறது என்றாய்.
இதில் நீயிருப்பதால் நன்றாகத்தான் இருக்கும்
ஆனால் இதை எழுதும்போது
நான் நன்றாக இல்லை என்றேன்.

வருத்தம் வார்த்தைகளாய் வந்தது
அதுவும் உதட்டில் இருந்து அல்ல
உள்ளத்தில் இருந்து என்றாய்.....

எழுதியவர் : parkavi (28-Aug-15, 10:12 pm)
பார்வை : 242

மேலே