SONG ON LIFE HAPPINESS

வரப்பு மீது நடந்து - வரும் போது
செழிப்பு மிக்க காட்சிகளை கண்டேன் (எல லே லோ

விண்ணை பார்த்து – பெண்ணைப் பார்க்கும் போது
என் மனத்தினில் மகிழ்ச்சி கூடுதம்மா இங்கு (எல லே லோ

நிலவைப் போல – ஒளிரும் அவள் கண்கள்
என்னைக் கண்டு ஏங்கியது அன்று (எல லே லோ

வாங்கி வந்த மல்லிகையை கொடுத்தேன்
வந்து என் அருகினிலே நின்றாள் (எல லே லோ

அன்புடனே அவளை நானும் தழுவ
அவளும் சேர்ந்து இன்பத்திலே திளைத்தாள் (எல லே லோ

வாழ்க்கை கடலில் பயணம் செய்ய நாங்கள்
இன்பம் எனும் தோணி ஏறி செல்வோம் (எல லே லோ

14-02-1979 ~ 04-10-2013
P Murugesa Pandian

எழுதியவர் : P முருகேச பாண்டியன் (6-Sep-15, 8:02 am)
பார்வை : 64

மேலே